மேலும் அறிய

தஞ்சாவூரில் தொடர் மழை - கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகள்

’’50-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைக்கத் தொடங்கியுள்ளது’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையத்திலேயே பல நாட்களாக தேங்கியிருப்பதால், தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் அந்த மூட்டைகளில் நாற்றுக்கள் முளைத்துள்ளது. இதனால் கொள்முதல் பணியாளர்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதால், பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகங்களிலும் நெல் சாகுபடியில்  விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் விளைவித்த நெல்லை, தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.


தஞ்சாவூரில் தொடர் மழை - கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகள்

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 7.50 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சந்தை பருவத்தில் (அக்.1 முதல் செப்.30 வரை) 10.54 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இதையடுத்து தற்போதைய சந்தை பருவத்தில் இது நாள் வரை 1.95 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அனைத்தையும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி, அந்த அரிசியை பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்த்தில் சுமார் 350 கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மாவட்டத்தில் உள்ள 5 நிரந்தர சேமிப்பு கிடங்குகள் மற்றும் 24 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூரில் தொடர் மழை - கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகள்

தற்போது அனைத்து சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் அதிக அளவில் இருப்பதால், தற்போது நவம்பர் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அந்தந்த கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால், அங்கு போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நெல் மூட்டைகளில் உள்ள நெல் மணிகள் பதறாகி, வீணாகி விடும். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் கடன் வாங்கி, கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல்லை, கொள்முதல் நிலையங்களில் சேதமடைந்தும், முளைத்து வீணாகி வருவதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைகின்றனர். இதுகுறித்து கொள்முதல் பணியாளர்கள் கூறுகையில்,


தஞ்சாவூரில் தொடர் மழை - கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சேமிப்பு கிடங்குகளிலும் நெல்மூட்டைகள் நிரம்பியுள்ளது. மழை பெய்து வருவதால் வெளிமாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை அனுப்ப முடியவில்லை. கடந்தாண்டு எதிர்பார்த்ததை விட அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டாலும், இருப்பு வைக்க இடமில்லை. இதனால் நவம்பர் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அந்தந்த கொள்முதல் நிலையத்திலேயே தேங்கியுள்ளது. மழையினால் அந்த மூட்டைகளும் சேதமடைந்து முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஏற்படும் எடை இழப்பு, சேதாரம் ஆகியவறுக்கு பருவகால பணியாளர்களிடம் அபராதமாக வசூலிக்கப்படும் என்பதால் பணியார்கள் கலக்கத்தில் உள்ளோம்.

இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர். இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்களை மாதந்தோறும் 45 ஆயிரம் மெட்ரிக் டன் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பப்படுகிறது. கடந்தாண்டை காட்டிலும் 50 சதவீதம் நெல் அதிகம் கொள்முதல் ஆனதால், தற்போது சேமிப்பு கிடங்குகளில் அதிகம் நெல் உள்ளது. தொடர் மழையினால் இயற்கை இடர்பாடுகளால் லாரிகளை தொடர்ந்து இயக்க முடியவில்லை. எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக 5 தினங்களுக்குள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

தலைப்பு செய்திகள்

விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
மாற்றத்தை நோக்கி பேரணி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் நிறைவு
மாற்றத்தை நோக்கி பேரணி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் நிறைவு
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
கோயில் புனித பயணம்.! ரூ.5,000 அள்ளிக்கொடுக்கும் அரசு- யாரெல்லாம் பெறலாம்? விண்ணப்பிக்க வழிமுறை இதோ..
கோயில் புனித பயணம்.! ரூ.5,000 அள்ளிக்கொடுக்கும் அரசு- யாரெல்லாம் பெறலாம்? விண்ணப்பிக்க வழிமுறை இதோ..
Embed widget