மேலும் அறிய

தஞ்சாவூரில் தொடர் மழை - கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகள்

’’50-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைக்கத் தொடங்கியுள்ளது’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையத்திலேயே பல நாட்களாக தேங்கியிருப்பதால், தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் அந்த மூட்டைகளில் நாற்றுக்கள் முளைத்துள்ளது. இதனால் கொள்முதல் பணியாளர்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதால், பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகங்களிலும் நெல் சாகுபடியில்  விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் விளைவித்த நெல்லை, தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.


தஞ்சாவூரில் தொடர் மழை - கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகள்

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 7.50 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சந்தை பருவத்தில் (அக்.1 முதல் செப்.30 வரை) 10.54 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இதையடுத்து தற்போதைய சந்தை பருவத்தில் இது நாள் வரை 1.95 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அனைத்தையும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி, அந்த அரிசியை பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்த்தில் சுமார் 350 கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மாவட்டத்தில் உள்ள 5 நிரந்தர சேமிப்பு கிடங்குகள் மற்றும் 24 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூரில் தொடர் மழை - கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகள்

தற்போது அனைத்து சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் அதிக அளவில் இருப்பதால், தற்போது நவம்பர் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அந்தந்த கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால், அங்கு போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நெல் மூட்டைகளில் உள்ள நெல் மணிகள் பதறாகி, வீணாகி விடும். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் கடன் வாங்கி, கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல்லை, கொள்முதல் நிலையங்களில் சேதமடைந்தும், முளைத்து வீணாகி வருவதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைகின்றனர். இதுகுறித்து கொள்முதல் பணியாளர்கள் கூறுகையில்,


தஞ்சாவூரில் தொடர் மழை - கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சேமிப்பு கிடங்குகளிலும் நெல்மூட்டைகள் நிரம்பியுள்ளது. மழை பெய்து வருவதால் வெளிமாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை அனுப்ப முடியவில்லை. கடந்தாண்டு எதிர்பார்த்ததை விட அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டாலும், இருப்பு வைக்க இடமில்லை. இதனால் நவம்பர் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அந்தந்த கொள்முதல் நிலையத்திலேயே தேங்கியுள்ளது. மழையினால் அந்த மூட்டைகளும் சேதமடைந்து முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஏற்படும் எடை இழப்பு, சேதாரம் ஆகியவறுக்கு பருவகால பணியாளர்களிடம் அபராதமாக வசூலிக்கப்படும் என்பதால் பணியார்கள் கலக்கத்தில் உள்ளோம்.

இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர். இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்களை மாதந்தோறும் 45 ஆயிரம் மெட்ரிக் டன் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பப்படுகிறது. கடந்தாண்டை காட்டிலும் 50 சதவீதம் நெல் அதிகம் கொள்முதல் ஆனதால், தற்போது சேமிப்பு கிடங்குகளில் அதிகம் நெல் உள்ளது. தொடர் மழையினால் இயற்கை இடர்பாடுகளால் லாரிகளை தொடர்ந்து இயக்க முடியவில்லை. எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக 5 தினங்களுக்குள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget