மேலும் அறிய

மன்னார்குடியில் புதிய சேமிப்பு கிடங்கை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

’’புதிதாக திறக்கப்பட்டுள்ள 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கில் சுமார் 3000 முதல் 4000 நெல் மூட்டைகள் சேமித்து கூடுதலாக பொருளீட்டு கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்’’

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மூங்கில்குடி, குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருள்களை பாதுகாத்து வருகின்றனர். மேலும் ஆண்டுக்காண்டு சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டிடங்களை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகத்தில் கட்டித் தரவேண்டும் அப்பொழுதுதான் அதிக அளவு நெல் பருத்தி உள்ளிட்ட பயிர்களை சேமித்து வைப்பதற்கு விவசாயிகளுக்கு பயன் தரும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். அதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக வரி துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வழியாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித் துறையின் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு மற்றும் விற்பனைக்கூட அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மன்னார்குடியில் புதிய சேமிப்பு கிடங்கை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதனையொட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4,500 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள கிடங்குகள் மற்றும் பரிவர்த்தன கூடங்களின் வசதிகளை கொண்டு மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், மற்றும் கூத்தாநல்லூர் வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து பொருளீட்டு கடன் பெற்றும் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் ஆண்டுதோறும் சராசரியாக மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 150 லட்சம் முதலீடு கடன் வழங்கப்பட்டு சுமார் 100 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கில் சுமார் 3000 முதல் 4000 நெல் மூட்டைகள் சேமித்து கூடுதலாக பொருளீட்டு கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் இதனை மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மன்னார்குடியில் புதிய சேமிப்பு கிடங்கை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மன்னார்குடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்கள் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை ஒட்டி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டி கொடுத்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதேபோன்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மன்னார்குடி பகுதிகளில் திறந்தவெளி கிடங்கின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கும் புதிய கட்டிடம் கட்டித் தந்து நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்க வேண்டும் என விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
"கர்ம வினையின் கணக்குப்பிள்ளை: பாசக்கயிறோடு தீர்ப்பெழுதும் காலதேவன்!"
நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget