மேலும் அறிய

தமிழ்நாட்டு வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் ஆடுகிறார்கள் என்று சொல்ல முடியாது - சென்னை கிங்ஸ் சிஇஓ

முன்பு மாதிரி மும்பையில் இருந்து ஏழு பேர் பத்து பேர் எல்லாம் அணியில் கிடையாது.இப்போது எல்லா மாநிலத்தில் இருந்தும் இரண்டு பேர் இந்திய அணியில் விளையாடுகிறார்கள்

ஐ பி எல் லின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார். சிஇஓ பேட்டி. 

திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்  சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  குஜராத் டைட்டன்ஸ் அணியில் பங்கு பெற்று ஐபிஎல் லில் விளையாடிய வீரரும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவருமான சாய் கிஷோர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, இயற்கையாகவே எனக்கு பெரிதாக கிரிக்கெட் விளையாட தெரியாது ரஞ்சித் டிராபியில் விளையாடும் போது கூட இதைதான் நான் உணர்ந்தேன். இருப்பினும் என்னை பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது ஒரு விஷயமே இல்லை. தொடர்ந்து நாம் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக பயிற்சியை பெரிதாக தவிர்க்காமல் இருந்தாலே போதுமானது. பயிற்சியை பொறுத்தவரை நான் அதிகமாக அதை தவிர்த்தது கிடையாது. பயிற்சிக்கு சரியாக நான் சென்றுவிடுவேன். அதேபோன்று எனது சிறுவயதில் எனக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்த கோச்சர் ஜானகிராமனுக்கு நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனவே நீங்களும் வெற்றி தோல்வியை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் பயிற்சியை தவிர்க்காமல் சரியாக பயிற்சி பெற்று ஐபிஎல் தமிழ்நாடு ரஞ்சித் டிராபி இந்திய அணி என அனைத்திலும் இடம்பெற்று விளையாட வேண்டும் என்பது எனது ஆசை.அதற்கு உங்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார். 


தமிழ்நாட்டு வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் ஆடுகிறார்கள் என்று சொல்ல முடியாது - சென்னை கிங்ஸ் சிஇஓ

நிகழ்ச்சியின் முடிவில் செய்தி யாளர்களை சந்தித்த சி.இ.ஓ காசி விஸ்வநாதன், "திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் 25 வது வெள்ளி விழா நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் நடத்துவது என்பது மிகவும் சிரமமானது.கடந்த 20 வருடங்களாக தான் பிசிசிஐ-க்கு பணம் வருகிறது அதை கொஞ்சம் கொஞ்சம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனுக்கு சரியான மைதானம் இல்லை.இன்று காலை கூட செயலாளர் பசுபதி சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் உள்ள மைதானத்தை காட்டினார் அதனை லீசுக்கு எடுப்பது குறித்து தொடர்ந்து பரிசிலீக்கப்படும். தமிழ்நாட்டு வீரர்கள் குறைவாக இந்திய அணியில்  ஆடுகிறார்கள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. டெஸ்ட் மேட்சில் அஸ்வின் இருக்கிறார். விஜய் இருக்கிறார்.- ஒன் டே மேட்சில் தினேஷ் கார்த்திக் அஸ்வின் இருக்கிறார்கள். அடுத்து சாய் கிஷோர் ஆடவிருக்கிறார். நிறைய தமிழக வீரர்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வாஷிங்டன் சுந்தரம் விஜய் சங்கர் ஆகியோர் காயம்பட்டுள்ளார்கள்.


தமிழ்நாட்டு வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் ஆடுகிறார்கள் என்று சொல்ல முடியாது - சென்னை கிங்ஸ் சிஇஓ

முன்பு மாதிரி மும்பையில் இருந்து ஏழு பேர் பத்து பேர் எல்லாம் அணியில் கிடையாது. இப்போது எல்லா மாநிலத்தில் இருந்தும் இரண்டு பேர் இந்திய அணியில் விளையாடுகிறார்கள். டி என் பி எல் இல் இருந்து 13 பேர் ஐ.பி.எல்-இல் சென்று விளையாடுகிறார்கள்.  அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திரன் தோனி விளையாடுவார். அதேபோன்று அணியின் கேப்டனாகவும் நீடிப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாவட்ட கிரிக்கெட் அணியினருக்கு கோப்பைகளை ஐபிஎல் வீரர் சாய் கிஷோர் வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget