மேலும் அறிய

தமிழ்நாட்டு வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் ஆடுகிறார்கள் என்று சொல்ல முடியாது - சென்னை கிங்ஸ் சிஇஓ

முன்பு மாதிரி மும்பையில் இருந்து ஏழு பேர் பத்து பேர் எல்லாம் அணியில் கிடையாது.இப்போது எல்லா மாநிலத்தில் இருந்தும் இரண்டு பேர் இந்திய அணியில் விளையாடுகிறார்கள்

ஐ பி எல் லின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார். சிஇஓ பேட்டி. 

திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்  சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  குஜராத் டைட்டன்ஸ் அணியில் பங்கு பெற்று ஐபிஎல் லில் விளையாடிய வீரரும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவருமான சாய் கிஷோர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, இயற்கையாகவே எனக்கு பெரிதாக கிரிக்கெட் விளையாட தெரியாது ரஞ்சித் டிராபியில் விளையாடும் போது கூட இதைதான் நான் உணர்ந்தேன். இருப்பினும் என்னை பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது ஒரு விஷயமே இல்லை. தொடர்ந்து நாம் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக பயிற்சியை பெரிதாக தவிர்க்காமல் இருந்தாலே போதுமானது. பயிற்சியை பொறுத்தவரை நான் அதிகமாக அதை தவிர்த்தது கிடையாது. பயிற்சிக்கு சரியாக நான் சென்றுவிடுவேன். அதேபோன்று எனது சிறுவயதில் எனக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்த கோச்சர் ஜானகிராமனுக்கு நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனவே நீங்களும் வெற்றி தோல்வியை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் பயிற்சியை தவிர்க்காமல் சரியாக பயிற்சி பெற்று ஐபிஎல் தமிழ்நாடு ரஞ்சித் டிராபி இந்திய அணி என அனைத்திலும் இடம்பெற்று விளையாட வேண்டும் என்பது எனது ஆசை.அதற்கு உங்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார். 


தமிழ்நாட்டு வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் ஆடுகிறார்கள் என்று சொல்ல முடியாது - சென்னை கிங்ஸ் சிஇஓ

நிகழ்ச்சியின் முடிவில் செய்தி யாளர்களை சந்தித்த சி.இ.ஓ காசி விஸ்வநாதன், "திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் 25 வது வெள்ளி விழா நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் நடத்துவது என்பது மிகவும் சிரமமானது.கடந்த 20 வருடங்களாக தான் பிசிசிஐ-க்கு பணம் வருகிறது அதை கொஞ்சம் கொஞ்சம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனுக்கு சரியான மைதானம் இல்லை.இன்று காலை கூட செயலாளர் பசுபதி சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் உள்ள மைதானத்தை காட்டினார் அதனை லீசுக்கு எடுப்பது குறித்து தொடர்ந்து பரிசிலீக்கப்படும். தமிழ்நாட்டு வீரர்கள் குறைவாக இந்திய அணியில்  ஆடுகிறார்கள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. டெஸ்ட் மேட்சில் அஸ்வின் இருக்கிறார். விஜய் இருக்கிறார்.- ஒன் டே மேட்சில் தினேஷ் கார்த்திக் அஸ்வின் இருக்கிறார்கள். அடுத்து சாய் கிஷோர் ஆடவிருக்கிறார். நிறைய தமிழக வீரர்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வாஷிங்டன் சுந்தரம் விஜய் சங்கர் ஆகியோர் காயம்பட்டுள்ளார்கள்.


தமிழ்நாட்டு வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் ஆடுகிறார்கள் என்று சொல்ல முடியாது - சென்னை கிங்ஸ் சிஇஓ

முன்பு மாதிரி மும்பையில் இருந்து ஏழு பேர் பத்து பேர் எல்லாம் அணியில் கிடையாது. இப்போது எல்லா மாநிலத்தில் இருந்தும் இரண்டு பேர் இந்திய அணியில் விளையாடுகிறார்கள். டி என் பி எல் இல் இருந்து 13 பேர் ஐ.பி.எல்-இல் சென்று விளையாடுகிறார்கள்.  அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திரன் தோனி விளையாடுவார். அதேபோன்று அணியின் கேப்டனாகவும் நீடிப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாவட்ட கிரிக்கெட் அணியினருக்கு கோப்பைகளை ஐபிஎல் வீரர் சாய் கிஷோர் வழங்கினார்.

தலைப்பு செய்திகள்

40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
நெற்றியில் பட்டைநாமம், காய்கறி மாலை: விவசாயிகள் நடத்திய நூதன மனு அளிக்கும் போராட்டம்
நெற்றியில் பட்டைநாமம், காய்கறி மாலை: விவசாயிகள் நடத்திய நூதன மனு அளிக்கும் போராட்டம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget