மேலும் அறிய

இந்த அரிசியை நீங்க சாப்புடுவீங்களா ? - அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி போராடிய பெண்கள்

வண்டு மொய்த்து, துர்நாற்றம் வீசும் அரிசி மூட்டைகளை அனைத்து நியாய விலை கடையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் கீழ்வேளூர் - கச்சனம் சாலை சந்திப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்  100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக தொடங்கிட கோரியும் , 100 நாள் வேலையை செல் போனில் பதிவு செய்வதை தடுத்திட கோரியும், நியாய விலை கடையில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை உண்பதற்கு உகந்த அரிசியாக வழங்க வேண்டும் என்றும், வண்டு மொய்த்து, துர்நாற்றம் வீசும் அரிசி மூட்டைகளை அனைத்து நியாய விலை கடையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா  தலைமையில் சாலை மறியலில் நடைபெற்றது. அப்போது ரேசன் கடைகளில் கொடுக்கப்பட்ட தரமற்ற அரிசியை கொட்டி சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வரவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
 

இந்த அரிசியை நீங்க சாப்புடுவீங்களா ? - அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி போராடிய பெண்கள்
 
இதையடுத்து அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜ கோபால், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது அதிகாரிகளுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எந்த கடையில் தரமற்ற ரேஷன் அரிசி உள்ளது என அதிகாரிகள் வினா எழுப்பினர். அதற்கு பெண்கள், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் இதே நிலைதான் உள்ளது எனக்கூறி வண்டுகள் மொய்த்து, துர்நாற்றம் வீசும் அரிசியை எடுத்து காண்பித்தனர். மேலும் இந்த அரிசியை நீங்கள் சமைத்து சாப்பிடுவீர்களா? எனவும்  அதிரடியாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
 

இந்த அரிசியை நீங்க சாப்புடுவீங்களா ? - அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி போராடிய பெண்கள்
 
இதில் அதிர்ந்து போன சிவில் சப்ளை அதிகாரிகள், வீணான அனைத்து அரிசிகளையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை போனில்  பதிவு செய்வதை நிறுத்த  அரசிடம் தெரிவிப்பதாக பேச்சுவார்த்தையில்  அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்களின் சாலை மறியல் போராட்டத்தால் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு 1 நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாதர் சங்கத்தை சேர்ந்த 185 பெண்களை கீழ்வேளூர் துறையினர் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள தனியார் திருமண  மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் சுபாதேவி ஒன்றிய தலைவர் வளர்மதி மற்றும் நூற்றுக்கணக்கான மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர் .
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget