BHEL : 'திருச்சி பெல் நிறுவனத்தில் பயிற்சி' உடனே அப்ளை பண்ணுங்க - வேலையில் சேருங்க..!
முழு நேர கல்வியில் படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம், தொலைத்தூர கல்வியில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது. ஐடிஐ முடித்தவர்களுக்கு விதிமுறைகளின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும்.

தஞ்சாவூர்: திருச்சி BHEL நிறுவனத்தில் 760 காலிப்பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு இது செம வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதீங்க. தமிழ்நாட்டிலேயே மத்திய அரசு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. மொத்தம் 760 இடங்களுக்கு திருச்சியில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் உதவித்தொகையுடன் பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பணிக்கான அனுபவத்தை பெறும் வாய்ப்பை இளைஞர்கள் பெறுகின்றனர். மேலும், வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு திருச்சியில் அமைந்துள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் (BHEL) பயிற்சி பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஐடிஐ பிரிவில் - 550 பணியிடங்கள், டிப்ளமோ பிரிவில் - 90 பணியிடங்கள், பட்டப்படிப்பு தகுதி பிரிவில் - பணியிடங்கள் என மொத்தம் 760 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
டிரேட் அப்ரண்டிஸ் 550
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் 90
பட்டப்படிப்பு அப்ரண்டிஸ் 120
மொத்தம் 760
டிரேட் அப்ரண்டிஸ் பிரிவில் பிட்டர், வெல்டர், எலெக்ட்ரிஷியன், டர்னர், மெக்கானிஸ்ட், இன்ரூமெண்ட் மெக்கானிஸ்ட், மோட்டார் மெக்கானிக், மெக்கானி ஆர் & ஏசி மற்றும் COPA ஆகிய பிரிவுகளில் இடங்கள் நிரப்பப்படுகிறது.
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பிரிவில் மெக்கானிக்கல், கணினி பொறியியல்/ தகவல் தொழில்நுட்பம், சிவில் பொறியியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் ஆகியவற்றில் 90 இடங்கள் நிரப்பப்படுகிறது.
பட்டப்படிப்பு தகுதிக்கான அப்ரண்டிஸ் பிரிவில் மெக்கானிக்கல், கணினி அறிவியல், சிவில், எலெல்க்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கணக்கியல் மற்றும் எச்.ஆர் பிரிவில் 120 இடங்கள் நிரப்பப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.
டிரேட் அப்ரண்டிஸ் பதவிக்கு பள்ளி படிப்பிற்கு பின்னர், அந்தந்த பிரிவுகளில் ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும். டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பதவிக்கு அந்தந்த பாடப்பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு அப்ரண்டிஸ் பதவிக்கு அந்தந்த பொறியியல் பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணக்கியல் பாடப்பிரிவில் பி.காம் முடித்திருக்க வேண்டும். எச்.ஆர் உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.A முடித்திருக்க வேண்டும்.
முழு நேர கல்வியில் படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம், தொலைத்தூர கல்வியில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது. ஐடிஐ முடித்தவர்களுக்கு தொழிற்பயிற்சியின் விதிமுறைகளின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும்.
டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.11,000 உதவித்தொகை வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பதார்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கு முன்பாக ஐடிஐ தகுதி பெற்றவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்திலும், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தகுதி உள்ளவர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, https://trichy.bhel.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வரும் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். காலதாமதம் செய்யாமல் இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.





















