மேலும் அறிய

நெருங்கி வரும் பொங்கல் திருவிழா... வாழைத்தார் விற்பனை அமோகம்; கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த ஆண்டை விட இந்தாண்டு வாழைத்தார் கூடுதல் விலைக்கு விற்பனை ஆகிறது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி வாழைத்தார் அறுவடைப்பணி மும்முரம் அடைந்து வருகிறது.

நமது கலாசாரத்தில் பெரும்பாலும் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் வழக்கம் ஆகும். தை மாதத்தில் தான் சூரியன் வட அரைக்கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதத்தில் விதைத்த நெல் தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்பட்டு இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.


தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என்று தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் பொங்கல் பண்டிகை அன்று புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடுவார்கள். இந்த பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடித்து இருப்பது கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைப்பழம் தான்.


இதற்காக வாழைத்தார் அறுவடை பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக செய்யப்படும். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு, வடுகக்குடி, ஆச்சனூர், சாத்தனூர், நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி உட்பட காவிரி டெல்டாவின் படுகை பகுதிகளில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. அந்த வகையில் இப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு வாழைத்தார் சாகுபடி நடந்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முக்கியமானது பூவன் ரகம்தான். இதுதான் தற்போது இப்பகுதிகளில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின்போது புதுமணத்தம்பதிகளுக்கு சீர் வரிசையாக பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள், கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைத்தார் போன்றவைகளை கொடுப்பார்கள். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் திருவையாறு பகுதியில் குவிந்துள்ளனர்.


நெருங்கி வரும் பொங்கல் திருவிழா... வாழைத்தார் விற்பனை அமோகம்; கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தற்போது வாழைத்தார் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. பூவன் ரக வாழைத்தார் ஒன்று ரூ.400 முதல் ரூ.450 வரை விலைக்கு போகிறது. கடந்தாண்டை விட ஒரு மடங்கு விலை அதிகம் செல்கிறது. அதாவது கடந்த ஆண்டு ஒரு பூவன் ரக தாரின் விலை ரூ.250 வரைதான் விற்பனையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு விலை உயர்ந்து அதிக விற்பனையாவதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து திருவையாறு அருகே வடுகக்குடியை சேர்ந்த வாழை விவசாயி மதியழகன் கூறுகையில்,  பொங்கல் பண்டிகை என்றால் பூவன் ரக வாழைப்பழம்தான் முக்கிய இடம் பெறும். அந்த வகையில் திருவையாறு உட்பட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் பூவன் ரகம்தான் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வாழைத்தார் அறுவடை நடந்து வருகிறது.

இங்கிருந்து தஞ்சாவூர், மாயவரம், சிதம்பரம், சீர்காழி, திருச்சி, குளித்தலை, தேனி, மோகனூர் என்று பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் வாழை சாகுபடி பாதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது அமோகமாக அதிக விலைக்கு விற்பனை ஆவதால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget