மேலும் அறிய

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் கவனத்திற்கு...

தேசிய அளவில் 2,736 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 155 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

தஞ்சாவூர்: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் நேர்முகத் தேர்விற்கு செல்பவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்கு https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செயல்முறை கடந்த 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் முதன்மைத் தேர்வு முடிவுகள் நவம்பர் 11-ம் தேதி வெளியானது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில், அவர்கள் நேர்முகத் தேர்விற்கு தயாராகும் வண்ணம் தமிழ்நாடு அரசு ரூ.50,000 ஊக்கத்தொகை அளிக்கிறது.

2025-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலை, முதன்மை ஆகிய 2 கட்டம் நிறைவடைந்து, நேர்முகத் தேர்விற்கு தகுதியானவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 2,736 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 155 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் நேர்முகத் தேர்விற்கு செல்பவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்கு https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நவம்பர் 13 முதல் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகிறது. 

கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 155 பேர் தேர்ச்சி பெற்று, இறுதி கட்டத்திற்கு தகுதிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது 13.97 சதவீதம் அதிகம் ஆகும். அதுமட்டுமின்றி, தேர்ச்சி பெற்றவர்களின் 87 பேர் தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.

சிவில் சர்வீஸ் பதவிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் சாதிக்கும் வண்ணம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கட்டணமில்லாமல், தங்கும் வசதியுடன் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேர்விற்கு தயாராகும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் முதல்நிலைத் தேர்விற்கு தயராகும் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்விற்கு தகுதிபெறும் நபர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2025-26 பட்ஜெட்டில், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் நேர்முகத் தேர்விற்கு செல்லும் இளைஞர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான இந்த நிதி ஆண்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்விற்கு தயாராகும் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.7,500 வழங்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 659 பேருக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தற்போது, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 155 பேருக்கு ரூ.50,000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக இத்தொகை நேரடியாக பயனர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 
 
ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள அறிவிக்கையைப் படித்து வரும் 24.11.2025 வரை விண்ணப்பிக்குமாறு நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவு சிறப்பு திட்ட இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்வர்கள் விவரம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும்.

தலைப்பு செய்திகள்

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget