மேலும் அறிய

தூய்மைப்பணியாளர்கள் என்றால் இளக்காரமா? அதிரடியாய் களத்தில் இறங்கி மறியல் போராட்டம்

தூய்மைப் பணியாளர்கள் என்பதால் தரக்குறைவாகவும், இலவச பேருந்து என்பதால் ஏற்ற மறுக்கின்றனர் என்று கூறி தூய்மைப்பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்: தூய்மைப் பணியாளர்கள் என்பதால் தரக்குறைவாகவும், இலவச பேருந்து என்பதால் ஏற்ற மறுக்கின்றனர் என்று கூறி தூய்மைப்பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூய்மைப்பணியாளர்கள் குற்றச்சாட்டு

இலவச பேருந்து என்று பேருந்தில் ஏற்ற மறுக்கின்றனர். தூய்மை பணியாளர்கள் என்பதால் தரகுறைவாகும் நடத்துகின்றனர் என்று கூறி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை மறித்து இன்று காலை போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தஞ்சை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராம பகுதியிலிருந்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பணிக்காக செல்ல வேண்டும். இதனால் அவர்கள் நகர பேருந்துகளில் செல்வது வழக்கம். தினமும் இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் இறங்கி மாறி செல்லும் நிலையும் உள்ளது.

பேருந்துகளில் ஏற்ற விடுவதில்லை

இந்நிலையில் இவர்கள் செல்லும் நேரத்தில் பேருந்துகளை முறையாக இயக்குவதில்லை. அவ்வாறு இயக்கும் பேருந்தில் ஏற்ற விடுவதில்லை. பேருந்துகளில் ஏற்ற மறுப்பு தெரிவிக்கின்றனர்.  தங்களை கண்டால் பேருந்துகளை நிறுத்தத்தில் நிறுத்தாமல் வேகமாக சென்று விடுகின்றனர் என பல குற்றச்சாட்டுக்களை தூய்மைப்பணியாளர்கள் தெரிவித்து வந்தனர்.

பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல்

இதற்கிடையில் இன்று காலையும் பேருந்துகளில் தங்களை ஏற்ற மறுப்பு தெரிவித்ததாக கூறிய தூய்மை பணியாளர்கள் இதனை கண்டித்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

காலை நேரம் என்பதால் அலுவலகத்திற்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். சுமார் 45 நிமிடங்கள் இந்த போராட்டம் நடந்தது. தொடர்ந்து போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்நிலையில் தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர ஊர்தி தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பணிக்காக அழைத்து சென்றது.

கோட்ட பொது மேலாளர் நடவடிக்கை

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை இன்று காலை நகர பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பேருந்தில் ஏற்ற‌ மறுத்த நடத்துனர் யேசுதாஸ் மற்றும் மாற்று நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ராஜா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இருவரையும் பணியிடை மாற்றம் செய்து கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Breaking News LIVE 5th OCT 2024: தமிழ்நாட்டில்  அக்டோபர் 15ம் தேதியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை
Breaking News LIVE 5th OCT 2024: தமிழ்நாட்டில் அக்டோபர் 15ம் தேதியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Breaking News LIVE 5th OCT 2024: தமிழ்நாட்டில்  அக்டோபர் 15ம் தேதியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை
Breaking News LIVE 5th OCT 2024: தமிழ்நாட்டில் அக்டோபர் 15ம் தேதியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை
முதல் கையெழுத்து விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு தான்... துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்...
முதல் கையெழுத்து விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு தான்... துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்...
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Oct 5: சிம்மத்துக்கு மதிப்பு அதிகரிக்கும், கன்னிக்கு பொருளாதார சிக்கல் குறையும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today: சிம்மத்துக்கு மதிப்பு அதிகரிக்கும், கன்னிக்கு பொருளாதார சிக்கல் குறையும்- உங்கள் ராசிக்கான பலன்
Kulasai Dussehra 2024: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம்! பக்தர்கள் நெகிழ்ச்சி
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம்! பக்தர்கள் நெகிழ்ச்சி
Embed widget