மேலும் அறிய

தஞ்சாவூர்: துளசி அய்யா வாண்டையார் உட்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப் பதிவு

காலமான பூண்டி கல்லூரி நிறுவனர் உட்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு

காலமான பூண்டி கல்லூரி நிறுவனர் துளசி அய்யா வாண்டையார் உட்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரி என்றால் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் கூட நன்கு அறிவார்கள். தஞ்சை நகர் பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள ஏராளமான கிராமப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பூண்டி புஷ்பம் கல்லூரி என்பது ஒரு கோயில் போல்தான். அந்த பெருமை இன்று வரை திகழ்ந்து வருகிறது. காரணம் இந்த கல்லூரியில் படித்த பல்லாயிரக்கணக்கானோர் இன்று உலகம் முழுவதும் உயர்ந்த பதவிகளை வகித்து வருகின்றனர் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. பலர் கல்வியாளர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அனைவராலும் இக்கல்லூரியின் நிறுவனர் பூண்டி துளசியய்யா வாண்டையார் காலமானார். தற்போது கல்லூரி நிர்வாகத்தை அவருடைய மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் கவனித்து வருகிறார். தஞ்சாவூர் அருகே பூண்டியில் அமைந்துள்ள இந்த தன்னாட்சி கலைக் கல்லூரியில் போலி ஆவணங்கள் கொடுத்து பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்ததாக லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் கல்லூரி கல்வி முன்னாள் மண்டல துணை இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதான் தற்போது தஞ்சை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் அருகே பூண்டியில் புகழ்பெற்ற புஷ்பம் கலைக்கல்லூரி 1956-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியை காலஞ்சென்ற முன்னாள் எம்பி  துளசி அய்யா வாண்டையார் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

இக்கல்லூரியில் 2015 -ம் ஆண்டு முதல் 2017 -ம் ஆண்டு வரை பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு  கிடைத்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரணை நடத்தினார். இதையடுத்து இக்கல்லூரியில் கடந்த 2017-ம் ஆண்டு  உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் இன சுழற்சி முறையை பின்பற்றவில்லை. இதில் உதவி பேராசிரியர்கள் எஸ்.கே.தியாகராஜன், சி.கற்பகசுந்தரி ஆகிய இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என போலியான சாதிச்சான்றிதழை வழங்கி  பணியில் சேர்ந்துள்ளனர்.

இதை உண்மை என சமர்ப்பித்து, அரசை ஏமாற்றி கல்லூரி நிர்வாகம் 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை அவர்களுக்கு ஊதியமாக ரூ. 55 லட்சம் பெற்று வழங்கியுள்ளது. எனவே இன சுழற்சி முறையில் பணி நியமனத்துக்கு தேர்வானவர்களின் சாதிச் சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்காமல் உதவி பேராசிரியர்களாக பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கிய தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி முன்னாள் துணை இயக்குநர் டி.அறிவுடைநம்பி, உதவிப் பேராசிரியர்கள் எஸ்.கே.தியாகராஜன், சி.கற்பகசுந்தரி, கல்லூரி தாளாளரும் முன்னாள் எம்பியும், காலஞ்சென்றவருமான கே.துளசிஅய்யா வாண்டையார் ஆகியோர் மீது  இந்திய தண்டனை சட்டம் 465, 120(பி),468, 471, 420, 409 ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த ஜூலை 27-ம் தேதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget