மேலும் அறிய

திருவையாற்றில் சிலிண்டர் வெடித்து 12 குடிசை வீடுகள் நாசம்

12 வீடுகளில் தீபற்றி எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது, இதில் 8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி, புதுத்தெருவை சேர்ந்த கூத்தையன் மகன் தா்மராஜ் (54). இவர் வீட்டில் பூக்கட்டும் நாரை விற்பனை செய்வதற்காக அடுக்கி வைத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நாரில் தீப்பற்றியது. அப்போது பலத்த காற்று அடித்ததால், தீ மளமள என அருகிலுள்ள பகுதிக்கு பரவியது. இதனால் அப்பகுதிக்கு அருகில் இருந்த கா்ணன் (50) வீட்டில் பற்றியது. வீடு முழுவதும் தீ பரவி வீட்டிற்குள் இருந்த கேஸ் சிலிண்டர் திடிரென வெடித்தது. இதனால் தீ வேகமாக பரவியதால், அப்பகுதியில் குடிசை வீட்டில் வசித்தும் வருபவர்களான அஞ்சலை, ராஜேஸ்வரி, முருகேசன், பூபதி, சைவராஜ், கல்யாணி, முருகேசன், மலா்கொடி, கீழத்திருப்பூந்துருத்தியை சோ்ந்த தனலெட்சுமி, சாந்தி ஆகிய 12 பேரின் வீடுகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் 12 வீட்டிற்குள் இருந்த பேன், மிக்ஸி, கிரைண்டர், பிரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து கருகியது.

திருவையாற்றில் சிலிண்டர் வெடித்து 12 குடிசை வீடுகள் நாசம்

12 வீடுகளில் தீபற்றி எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவலறிந்த நடுக்காவேரி போலீசார், தீயணைப்பு துறையினருக்கும், மின்சார துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அங்குள்ள வீடுகளில் தீ பரவியதையடுத்து 4 தீயணைப்பு வாகனங்களில், 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் குடிசை வீட்டில் உள்ளவர்கள் விவசாய வேலைக்கு சென்றதால், பூபதி என்பவருத்து லேசான தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயினால், மின்கம்பிகள் முழுவதும் எரிந்ததால், உடனடியாக மின்சாரத்துறையினர் மின்சாரத்தை துண்டித்தனர். பெரும் தீவிபத்தை அறிந்த பொது மக்கள், விவசாயிகள் திரண்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

திருவையாற்றில் சிலிண்டர் வெடித்து 12 குடிசை வீடுகள் நாசம்

இது குறித்து தகவலறிந்த தஞ்சை சப் கலெக்டா் வேலுமணி, தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழுத் தலைவா் அரசாபகரன், ஒன்றியச் செயலாளார் கௌதமன், பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமார், நகரச்செயலாளா் அகமதுமைதீன் ஆகியோர்  சம்பவ இடத்தை பார்வையிட்டு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கும் தலா 5 ஆயிரம் பணம், வேட்டி, புடவை, அரிசி, மண்ணெண்ணை ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார்கள். தீ விபத்து குறித்து நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரித்து வருகின்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget