மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

தமிழகத்தில் மீன் குஞ்சுகள் 75 சதவீதம் உற்பத்தி - மீன்வளத்துறை அமைச்சர் பெருமிதம்

முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் ஐ.டி.,ரெய்டு நடப்பது குறித்து நிருபர் ஒருவர் கேட்டதற்கு, ஐ.டி.ன்னா? என்ன என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மழுப்பலாக பதில் கூறியப்படி நழுவி சென்றார்.

தஞ்சாவூர்: தமிழகத்தில் மீன் குஞ்சுகள் 75 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்று மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் கரந்தையிலுள்ள நீர் வாழ் உயிரின ஆய்வுக் கூடத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்திலுள்ள அனைத்து ஆறுகள், குளங்களில் மீன் வளத்தை அதிகப்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மீன் வளத் துறை மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து ஆறுகள், குளங்களில் விடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், ஆந்திரா உட்பட பிற மாநிலங்களிலிருந்து மீன் குஞ்சுகள் வாங்கக்கூடிய சூழ்நிலையும் இருந்து வந்தது. இந்த நிலைமைகள் தற்போது மாறி மொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து பண்ணைகளிலும் மீன் குஞ்சுகள் உற்பத்தி செயப்படுகின்றன. இப்பகுதியில் மீன் உற்பத்தியை இன்னும் அதிகப்படுத்துவதற்கான ஆலோசனைகள் பெற்று நிறைவேற்றப்படும்.

மேட்டூர், தஞ்சாவூர், தாமிரபரணி ஆகிய பகுதிகளில் குஞ்சு பொறிப்பகங்கள் அதிகமாக உள்ளன. கடந்த காலங்களில் மீன் குஞ்சுகளை வெளி மாநிலங்களிலிருந்து அதிகமாக வாங்கி விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது தமிழகத்திலேயே 75 சதவீதம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடல் மீன்கள் உள்பட ரூ. 6 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன் பிடி தடை காலத்தில் மீன்வர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. இத்தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் இந்த கோரிக்கை குறித்து கனிவுடன் நடவடிக்கை எடுப்பார். தஞ்சையில் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. அதற்கான நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரசாயனத்தைப் பயன்படுத்தி மீன்களைப் பதப்படுத்தினால், மீன் வளத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் ஐ.டி.,ரெய்டு நடப்பது குறித்து நிருபர் ஒருவர் கேட்டதற்கு, ஐ.டி.ன்னா? என்ன என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மழுப்பலாக பதில் கூறியப்படி நழுவி சென்றார்.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Arvind Kejriwal : ”போயிட்டு வரேன் மகனே!” திகார் சென்றார் கெஜ்ரிவால் உருக்கமான வீடியோTTV Dhinakaran on ADMK :  ”அதிமுக தலைமை மாறுமா? ஜூன் 4 வரை WAIT பண்ணுங்க” ட்விஸ்ட் வைத்த TTVTemple demolished : விநாயகர் கோயில் இடிப்புகள்ளக்குறிச்சியில் பரபரப்பு நடந்தது என்ன?Rahul Angry on Exit Poll : ”கருத்து கணிப்பா இது.. மோடியின் கணிப்பு” ராகுல் காந்தி காட்டம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Health Insurance: அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் -  காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் - காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
Gautam Adani: ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
Embed widget