மேலும் அறிய

62 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் உழவர் சந்தை அலாரம் - மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

''திமுக முன்னாள் அமைச்சர் கோசி.மணி, சிறப்பு நிதி ஒதுக்கி, உடனடியாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அலாரம் செயல்பட்டது''

கும்பகோணத்தில் கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு பழையபேருந்து நிலையம் பகுதியில் பொது மக்களின் நலனுக்காக, சுமார் 50 அடி உயரத்தில் இரும்பினாலான டவரில் அமைக்கப்பட்டது தற்போது உழவர் சந்தையில் உள்ள அலாரம் பல ஆண்டுகள் ஆனாலும், மழை வெயிலினால் இரும்பு டவர்கள் துருபிடிக்காமல் அப்படியே உள்ளது. வேலைக்கு செல்லும் கும்பகோணம் பகுதி மக்களுக்கு நேரத்திற்கு செல்ல  வேண்டும் என்பதற்காக காலை 6 மணி , 9 மணி மதியம் 1 மணி , மாலை 6 மணி, இரவு 8 மணி என உழவர் சந்தையில் உள்ள இரும்பு  டவரில் அமைக்கப்பட்ட அலாரம் எழுப்பும் ஒலியினை வைத்து சென்று வந்தனர். அலாரத்தில் எழுப்பும் ஒலியை கொண்டு வேலை செய்யும் நேரத்தில் கணக்கீட்டு சென்று வந்தனர்.

கும்பகோணத்தில் மையப்பகுதியில் இருப்பதால், சுமார் 5 கிலோ மீட்டர் துாரம் வரை அலாரத்தின் ஒலி கேட்பதால், கும்பகோணம் நகர மற்றும் கிராமத்தை சேர்ந்தவர்கள் பயன்பெற்று வந்தனர். இதே போல் கும்பகோணம் நகரத்தில் உள்ள தொழிற்கூடங்கள், சீவல் பேக்டரிகள், புகையிலை நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ் பணிமனைகள் பணியாற்றுபவர்கள், பொது மக்கள் பஸ் மற்றும் ரயிலுக்கு செல்லவேண்டும் என்றால், இந்த அலாரத்தின் ஒலியை கணக்கீட்டு சென்று வந்தனர். மேலும் கோயில்களுக்கு செல்பவர்கள், அலாரத்தை வைத்து கோயில் திறந்திருப்பார்கள் என்று சென்று வந்தனர்.

62 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் உழவர் சந்தை அலாரம் - மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

இதே போல் சினிமா தியேட்டர்களில் திரைப்படம் போட்டிருப்பார்கள் என அலாரத்தை வைத்து தியட்டர்களுக்கு சென்று வந்தனர்.ஒரு காலத்தில் கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள உழவர் சந்தையிலுள்ள அலாரம் பொது மக்களுக்கு அத்தியாவசியமாகவும்,முக்கியமாகவும் கருதப்பட்டது.இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அலாரம் செயல்படாமல் காடசிபொருளாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் போதுமான பராமரிப்பு செய்யாததால், தற்போது வெறும் அலாரம் இயந்திரம் மட்டும் உள்ளது. அலாரம் எழுப்பும் இயந்திரம் மேற்கூரை பெயர்க்கப்பட்டு வெறும் கம்பிகள் மட்டும் உள்ளது.


62 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் உழவர் சந்தை அலாரம் - மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

இதனையறிந்த அப்போதைய திமுக முன்னாள் அமைச்சர் கோசி.மணி, சிறப்பு நிதி ஒதுக்கி, உடனடியாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அலாரம் செயல்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் வந்ததால், அலாரத்தை பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதனால் அலாரமுள்ள இயந்திரத்தில் பறவைகள் கூடு கட்டியும், மழை நீர் புகுந்து வருவதால், பல ஆண்டுகள் பழமையான அலாரம் செயல்படாமல் காட்சி பொருளாக இருப்பது வேதனையான விஷயமாகும்.எனவே, கும்பகோணத்திற்கு பாரம்பரியமானதும் பழமையான, கும்பகோணம் உழவர் சந்தையில் செயல்படாமல் காட்சி பொருளாக இருக்கும் அலாரத்தை சீர் செய்ய,நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget