மேலும் அறிய

திருவாரூரில் 4 பேருக்கு டெங்கு - இதுவரை 85 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பினர்

’’டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் யாரும் செயல்பட்டால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை’’

திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 254 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் உள் நோயாளியாகவும் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 நபர்கள் சாதாரண காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி அரசு மருத்துவமனை, உள்ளிட்ட மருத்துவமனைகளில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூரில் 4 பேருக்கு டெங்கு - இதுவரை 85 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பினர்
 
மேலும் மாவட்டம் முழுவதும் 4 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிக்கப்பட்ட 4 நபர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு கொசு வலை பொருத்தப்பட்ட தனி படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காய்ச்சல் அடித்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் காய்ச்சல் காரணமாக வரும் நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர் உள்ளிட்ட அனைத்து மருந்து பொருட்களும் மருத்துவமனைகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனி பிரிவு தொடங்கப்பட்டு அந்தப் பிரிவில் 25 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளன என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் 4 பேருக்கு டெங்கு - இதுவரை 85 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பினர்
 
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 89 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று இதுவரை 85 நபர்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் காலை 6 மணி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும்  டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் யாரும் செயல்பட்டால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி- எழும் கேள்விகள்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி- எழும் கேள்விகள்
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Maruti Ciaz: பட்ஜெட் விலையில் கார் வாங்கனுமா? Maruti Ciaz விலை, மைலேஜ் எப்படி?
Maruti Ciaz: பட்ஜெட் விலையில் கார் வாங்கனுமா? Maruti Ciaz விலை, மைலேஜ் எப்படி?
Embed widget