மேலும் அறிய

கொல்கத்தாவிலிருந்து தஞ்சைக்கு வந்த 27 லட்சம் சாக்குகள்: எதற்காக?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்பட பல பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்: குறுவை அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் கொள்முதல் செய்வதற்கு தடை ஏற்படாமல்  இருக்க கொல்கத்தாவில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரயில் மூலம் 5460 பேரல் சாக்குகள் தஞ்சைக்கு வந்தது. அதனை லாரிகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்பட பல பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மத்திய, மாநில அரசுகள் நெல் ஒரு குவின்டாலுக்கு புதிய ஆதார விலை அறிவித்தது. இதன்படி குவிண்டாலுக்கு ஒன்றுக்கு ரூ.2545 அறிவிக்கப்பட்டுள்ளது.


கொல்கத்தாவிலிருந்து தஞ்சைக்கு வந்த 27 லட்சம் சாக்குகள்: எதற்காக?

தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் முன்கூட்டியே குறுவை சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் இந்த அறுவடைப்பணிகள் இன்னும் அதிகரிக்கும். இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாட்டால் கொள்முதல் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொல்கத்தா மாநிலத்தில் இருந்து 27,30,000 சாக்குகள் சரக்கு ரயிலில் தஞ்சைக்கு வந்தது. 

அதனை 150 லாரிகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் உள்ள நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி என 10 தாலுகா உள்ளது. சரக்கு ரயிலில் வந்த சாக்குகள் அனைத்தும் பிரித்து மேற்கண்ட தாலுகாக்களுக்கு அனுப்பப்பட்டது. 

தஞ்சை மாவட்டத்தில் வரும் 8ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருங்குளம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்கா வயல் பண்ணை வயல் உள்ளிட்ட பகுதிகளில் நெல்முட்டைகள் தேங்கியுள்ளது. எனவே மழை காலம் தொடங்குவதற்கு முன்பு அங்கு தேங்கியுள்ள நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பூதலூர், சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, எட்டு கரம்பை, மருங்குளம், நாஞ்சிக்கோட்டை, அம்மாபேட்டை, மாரியம்மன் கோயில், சாலியமங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குருவை சாகுபடியான 120 நாள் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இன்னும் 3 வாரங்களில் அறுவடைக்கு வந்துவிடும் நிலையில் உள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் இலக்கை எட்டி 1.97 லட்சம் ஏக்கரில் குறுவைப் பணிகள் நடைபெற்று உள்ளது.

மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு சாக்கு தட்டுப்பாடுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொல்கத்தாவில் இருந்து சாக்குகள் வரவழைக்கப்பட்டது. அதன்படி 5460 பேரல் சாக்குகள் சரக்கு ரயிலில் தஞ்சை வந்தது. ஒரு பேரல் என்பது 500 சாக்குகள் ஆகும். அதன்படி 27,30,000 சாக்குகள் நேற்று தஞ்சை வந்தது. 

அதனை லாரிகள் மூலம் சாக்குகள் ஏற்றப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் கொள்முதல் பணிகள் தடையின்றி நடக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
பெண்களை துரத்தும் தவெக நிர்வாகிகள்.. தூங்குகிறதா சிங்கப்பெண் படை? கேள்வி கேட்கும் நயினார் நாகேந்திரன்
பெண்களை துரத்தும் தவெக நிர்வாகிகள்.. தூங்குகிறதா சிங்கப்பெண் படை? கேள்வி கேட்கும் நயினார் நாகேந்திரன்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
Embed widget