மேலும் அறிய

சிங்கப்பூர் போலீஸ் பேசுவதாக கூறி தஞ்சையை சேர்ந்த நபரிடம் 2 லட்சம் மோசடி

’’பணம் எடுக்கப்பட்டதே தவிர முருகானந்தம் கிரெடிட் கார்டில் பணம் சேர்க்கப்படவில்லை. இதனையடுத்து தன்னை அழைத்த வாட்ஸ் ஆப் காலுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் போன் ஸ்விட்ச் ஆப்பாகியிருந்தது’’

கிரெடிட் கார்ட்டில் பணம் கட்டாமல் உள்ளது என்று சிங்கப்பூர் போலீசில் இருந்து பேசுகிறோம் என வாட்ஸ் அப் கால் வாயிலாக பேசி தஞ்சையை சேர்ந்தவரின் வங்கி கணக்கில் இருந்து 2 லட்சம் பணத்தை எடுத்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை விளார் ரோடு, பத்மநாபன் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் முருகானந்தம் (45). இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ஊருக்கு திரும்பி வந்துவிட்டார். தொடர்ந்து மே மாதம் மீண்டும் விசா கிடைத்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இவர் சிங்கப்பூருக்கு செல்ல முடியாத நிலை உருவானது. முருகானந்தம் தனது தேவைக்காக சிங்கப்பூரில் 2 கிரெடிட் கார்டுகள் உபயோகப்படுத்தி வந்துள்ளார்.


சிங்கப்பூர் போலீஸ் பேசுவதாக கூறி தஞ்சையை சேர்ந்த நபரிடம் 2 லட்சம் மோசடி

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி, முருகானந்ததின், செல்போன் எண்ணிற்கு ஒரு வாட்ஸ் அப் கால் வந்துள்ளது. இதை எடுத்து பேசிய முருகானந்தத்திடம் எதிர்முனையில் பேசியவர்,  சிங்கப்பூர் போலீசில் இருந்து பேசுகிறோம். கிரெடிட் கார்ட்டில் பணம் கட்ட வேண்டி உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் வங்கியில் பணம் போடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதற்கு பணம் போடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூருக்கு செல்வதில் இடையூர் ஏற்படுமோ என்றும், சிங்கப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்தால், பிரச்சனை விபரீதமாகிவிடுமோ என்று பயந்து, வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவித்தார். வீட்டிலுள்ளவர்களும் உடனடியாக பணத்தை கேட்கும் தொகையை செலுத்தி விடுங்கள் என்றனர்.

இதனையடுத்து முருகானந்தம்,  ஒரத்தநாட்டிலுள்ள இந்தியன் வங்கியில் தனது மனைவியின் வங்கி கணக்கு விபரங்களையும், அதே வங்கியில்  தனது மனைவியின் உள்ள தனது ஜாயின்ட் கணக்கு விபரங்களையும் தெரிவித்துள்ளார். மேலும் ஓடிபி விபரத்தையும் கூறியுள்ளார். தொடர்ந்து வாட்ஸ் அப் காலில் பேசிய நபர் முதலில் முருகானந்தம் மனைவி வங்கி கணக்கில் இருந்து 1.98 லட்சத்தையும், இருவரின் ஜாயின்ட் கணக்கில் இருந்து 2 ஆயிரம் என மொத்தம் 2 லட்சத்தை நெட் பேங்கிங் வாயிலாக எடுத்துள்ளார். இந்த பணத்தை கிரெடிட் கார்ட் கணக்கில் சேர்ப்பதற்காக என்று கூறியுள்ளார்.

ஆனால் பணம் எடுக்கப்பட்டதே தவிர முருகானந்தம் கிரெடிட் கார்டில் பணம் சேர்க்கப்படவில்லை. இதனையடுத்து தன்னை அழைத்த வாட்ஸ் ஆப் காலுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் போன் ஸ்விட்ச் ஆப்பாகியிருந்தது. அதன் பிறகு பல முறை தொடர்பு கொண்ட போதும் ஸ்விட்ச் ஆப்பாகி இருந்ததால், முருகானந்தம், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூரில் இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. பணத்தை ஏமாந்தவர்களும் புகார் அளித்து வருகின்றார்கள். ஆனால் போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்று தெரியவில்லை என்று புகார் அளித்தவர்கள் புலம்புகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget