மேலும் அறிய

மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன் உட்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி

இந்தியாவிலேயே புவிசார் குறியீடு அதிக அளவில் பெற்றுள்ள மாநிலமாக முதல் இடத்தில் தமிழ்நாட்டில் உள்ளது.

தஞ்சாவூர்: மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன் உட்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதியாகி உள்ளது என்று தெ தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு உள்பட  11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான சஞ்சய்காந்தி தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே தஞ்சாவூர் வீணை, தலையாட்டி பொம்மை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்பட 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

அந்த வகையில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கு ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டது‌.

பல ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு செய்து இந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டோம். அனைத்து ஆய்வுகளும் முடிந்த பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. 4 மாதங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. மேற்கூறிய 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைப்பதில் எந்தவித எதிர்ப்பும் இல்லாததால் அந்த பொருட்கள் அனைத்தும் சட்டப்படி புவிசார் குறியீடு பெற்றதாக அறிவிக்கப்படும். இன்று அரசு அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடும். இதன் மூலம் 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.


மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன் உட்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி
மேலும் 15-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்துள்ளது. அந்த பொருட்களுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும். புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அந்த பொருள் தனி தன்மை பெறுகிறது.

வெளிநாடுகளுக்கும் எளிதாக ஏற்றுமதி செய்யலாம். பொருட்களை தயாரிப்பவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக பார்க்கப்படுவர். அவர்களுக்கு அதிகளவில் லாபம் கிடைக்கும். இன்று புவிசார் குறியீடு கிடைக்கும் 11 பொருட்களையும் சேர்த்து தமிழ்நாட்டில் மட்டும் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே புவிசார் குறியீடு அதிக அளவில் பெற்றுள்ள மாநிலமாக முதல் இடத்தில் தமிழ்நாட்டில் உள்ளது. இரண்டாம் இடத்தில் கர்நாடகம், மூன்றாவது இடத்தில் உத்தரபிரதேசம் மாநிலம் உள்ளது. இது தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget