மேலும் அறிய

ரூ.11 லட்சம் கொடுத்தால் தான் உடலை கொடுப்போம்; தனியார் மருத்துவமனை நிபந்தனையால் கதறிய பெற்றோர்

வீடு நிலம் அடமானம் வைத்தும் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பணத்தை சேகரித்து தான்  இந்த பணத்தை கட்டி உள்ளோம். மேலும் 2 லட்சம் ரூபாய் கட்டுவதற்கு தங்களிடம் வசதி இல்லை.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் அனிதா தம்பதியினரின் 7 வயது மகன் யுவனேஷ். வீரப்பன் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் யுவனேஷ் சிறுநீரக கோளாறல் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிறுவனின் உடல்நிலை மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி திருச்சி  தனியார் மருத்துவமனையில் சிறுவனை மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு 53 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதுவரை பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் ஒன்பது லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் கேட்டுள்ளனர்.


ரூ.11 லட்சம் கொடுத்தால் தான்  உடலை கொடுப்போம்; தனியார் மருத்துவமனை நிபந்தனையால் கதறிய பெற்றோர்

அதற்கு பெற்றோர்கள், வீடு நிலம் போன்றவற்றை அடமானம் வைத்தும் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பணத்தை சேகரித்து தான்  இந்த பணத்தை கட்டி உள்ளோம். மேலும் 2 லட்சம் ரூபாய் கட்டுவதற்கு தங்களிடம் வசதி இல்லை எனவே சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்த நிலையில் இன்று அதிகாலை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் சிறுவனின் உடலை தருமாறு கேட்டதற்கு மேலும் 11 லட்சம் ரூபாய் பணம் கட்டினால் உடலை தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து செய்வதறியாது திகைத்த பெற்றோர் உறவினர்கள் உதவியுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு சிறுவனின் தாய் கதறி அழுதது காண்போர் நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது.


ரூ.11 லட்சம் கொடுத்தால் தான்  உடலை கொடுப்போம்; தனியார் மருத்துவமனை நிபந்தனையால் கதறிய பெற்றோர்

தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனின் உடலை மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து மீட்டுத் தருமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் நாரணமங்கலம் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெற்றோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு தெரிந்த நிலையில், நேற்று நள்ளிரவு பணம் நிபந்தனை இல்லாமல் சிறுவனின் உடலை மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் நல்லடக்கம் செய்ய சொந்த ஊரான நாரணமங்கலம் பகுதிக்கு சிறுவனின் உடல் கொண்டுவரப்பட்டது. அப்போது குழந்தையின் தாய் மற்றும் ஊர் மக்கள் கதறிய காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானம் இல்லாத முறையில் தனியார் மருத்துவமனை உயிரிழந்த சிறுவனின் உடலை கொடுக்காமல் பெற்றோரை அலைக்கழித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியது. தற்பொழுது சிறுவனின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக கொண்டு வந்த பொழுது அந்த கிராமமே ஒன்று திரண்டு கண்ணீர் மல்க சிறுவனுக்கு விடை அளித்த சம்பவம் பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget