மேலும் அறிய

ரயிலில் ஓசி பயணம்.. சிக்கும் வடமாநிலத்தவர்கள்... லட்சக்கணக்கில் அபராதம் வசூல்

தமிழகத்தில் நடைபெறும் ரயில் டிக்கெட் பரிசோதனையில் அடுத்தடுத்து வடமாநிலத்தவர்கள் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நடைபெறும் ரயில் டிக்கெட் பரிசோதனையில் அடுத்தடுத்து வடமாநிலத்தவர்கள் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்யும் போது உரிய பயணச்சீட்டு பெற்றுள்ளோமா என்பதை டிக்கெட் பரிசோகதர்கள் சோதனை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் இந்த பரிசோதனை கட்டாயம் நடைபெறும் என்பதால் பிளாட்பார்ம் டிக்கெட், பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாமல் சென்றால் பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும். 

ஆனால் வடமாநிலங்களுக்கு பயணப்படும் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநில மக்கள் டிக்கெட் எடுக்காமலும், முன்பதிவு செய்யப்பட்டவர்களின் இடங்களிலும் அமர்ந்து கொண்டு பிற பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக தொடர்ந்து பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் ரயில்வே துறை சார்பில் அவ்வப்போது பரிசோதனை நடைபெற்று அபராதம் மற்றும் அதனை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம். 


ரயிலில் ஓசி பயணம்.. சிக்கும் வடமாநிலத்தவர்கள்... லட்சக்கணக்கில் அபராதம் வசூல்

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் வழியாக பெங்களூருவிலிருந்து பாட்னா வரை இயக்கப்படும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் பெரம்பூர் ரயில் நிலையம் வந்த போது ரயில்வே அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அதில் நூற்றுக்கணக்கானோர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர்களை மொத்தமாக பிடித்த காவல்துறையினர், 683 பேரிடம் இருந்து சுமார் ரூ.3,38,560 வசூல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு ரயிலிலேயே இவ்வளவு என்றால் வடக்கு நோக்கி செல்லும் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் செல்லும் பயணிகளால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் வலியுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பீஹாரில் சென்னை வழியாக எர்ணாகுளம் செல்லும் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தது. அப்போது பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் டிக்கெட் எடுக்காமல் வந்ததாக ரூ.51,540 அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதே ரயில் காட்பாடி செல்வதற்குள் மீண்டும் ரயிலில் அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனை நடத்தினர். 

இதில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 199 பேரிடம் இருந்து ரூ. 1, 05, 500 வசூல் செய்யப்பட்டது. இப்படி கொத்துக் கொத்தாக அடுத்தடுத்து டிக்கெட் எடுக்காமல் வடமாநிலத்தவர்கள் சிக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
ரெயில் பயணிகள் கவனத்திற்கு !! பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
ரெயில் பயணிகள் கவனத்திற்கு !! பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
பழனி கோயில் பத்திரப்பதிவு முறைகேடு: நிர்மல்குமார் மீது மூர்த்தி கடும் குற்றச்சாட்டு!
பழனி கோயில் பத்திரப்பதிவு முறைகேடு: நிர்மல்குமார் மீது மூர்த்தி கடும் குற்றச்சாட்டு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget