மேலும் அறிய

ரயிலில் ஓசி பயணம்.. சிக்கும் வடமாநிலத்தவர்கள்... லட்சக்கணக்கில் அபராதம் வசூல்

தமிழகத்தில் நடைபெறும் ரயில் டிக்கெட் பரிசோதனையில் அடுத்தடுத்து வடமாநிலத்தவர்கள் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நடைபெறும் ரயில் டிக்கெட் பரிசோதனையில் அடுத்தடுத்து வடமாநிலத்தவர்கள் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்யும் போது உரிய பயணச்சீட்டு பெற்றுள்ளோமா என்பதை டிக்கெட் பரிசோகதர்கள் சோதனை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் இந்த பரிசோதனை கட்டாயம் நடைபெறும் என்பதால் பிளாட்பார்ம் டிக்கெட், பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாமல் சென்றால் பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும். 

ஆனால் வடமாநிலங்களுக்கு பயணப்படும் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநில மக்கள் டிக்கெட் எடுக்காமலும், முன்பதிவு செய்யப்பட்டவர்களின் இடங்களிலும் அமர்ந்து கொண்டு பிற பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக தொடர்ந்து பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் ரயில்வே துறை சார்பில் அவ்வப்போது பரிசோதனை நடைபெற்று அபராதம் மற்றும் அதனை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம். 


ரயிலில் ஓசி பயணம்.. சிக்கும் வடமாநிலத்தவர்கள்... லட்சக்கணக்கில் அபராதம் வசூல்

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் வழியாக பெங்களூருவிலிருந்து பாட்னா வரை இயக்கப்படும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் பெரம்பூர் ரயில் நிலையம் வந்த போது ரயில்வே அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அதில் நூற்றுக்கணக்கானோர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர்களை மொத்தமாக பிடித்த காவல்துறையினர், 683 பேரிடம் இருந்து சுமார் ரூ.3,38,560 வசூல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு ரயிலிலேயே இவ்வளவு என்றால் வடக்கு நோக்கி செல்லும் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் செல்லும் பயணிகளால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் வலியுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பீஹாரில் சென்னை வழியாக எர்ணாகுளம் செல்லும் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தது. அப்போது பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் டிக்கெட் எடுக்காமல் வந்ததாக ரூ.51,540 அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதே ரயில் காட்பாடி செல்வதற்குள் மீண்டும் ரயிலில் அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனை நடத்தினர். 

இதில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 199 பேரிடம் இருந்து ரூ. 1, 05, 500 வசூல் செய்யப்பட்டது. இப்படி கொத்துக் கொத்தாக அடுத்தடுத்து டிக்கெட் எடுக்காமல் வடமாநிலத்தவர்கள் சிக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gangers Review : சுந்தர் சி வடிவேலு காம்போ இஸ் பேக்...கவலை மறந்து சிரிக்க வைக்கும் கேங்கர்ஸ்...முழு விமர்சனம் இதோ
Gangers Review : சுந்தர் சி வடிவேலு காம்போ இஸ் பேக்...கவலை மறந்து சிரிக்க வைக்கும் கேங்கர்ஸ்...முழு விமர்சனம் இதோ
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதல் எதிரொலி! 1500 பேர் அதிரடி கைது! ஆக்சனில் இறங்கிய இந்தியா
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதல் எதிரொலி! 1500 பேர் அதிரடி கைது! ஆக்சனில் இறங்கிய இந்தியா
தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
மதத்தின் அடிப்படையில் தீவிரவாதம் – இந்தியா கொடுக்கப்போகும் பதிலடி! அண்ணாமலை காட்டம்!
மதத்தின் அடிப்படையில் தீவிரவாதம் – இந்தியா கொடுக்கப்போகும் பதிலடி! அண்ணாமலை காட்டம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடுAshmitha Shri Vishnu | பெண்களிடம் பாலியல் சேட்டை!”கையில் சரக்கு.. CONDOM..” சிக்கிய தவெக நிர்வாகி!”நான் இப்படி தான் நடிப்பேன்” சிம்ரன் Vs ஜோதிகா?பற்றி எரியும் புது பஞ்சாயத்து | Simran Vs JyotikaAnnamalai: MP ஆகும் அண்ணாமலை இறங்கி வந்த சந்திரபாபு! பாஜக பக்கா ஸ்கெட்ச்! | BJP | Chandrababu Naidu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gangers Review : சுந்தர் சி வடிவேலு காம்போ இஸ் பேக்...கவலை மறந்து சிரிக்க வைக்கும் கேங்கர்ஸ்...முழு விமர்சனம் இதோ
Gangers Review : சுந்தர் சி வடிவேலு காம்போ இஸ் பேக்...கவலை மறந்து சிரிக்க வைக்கும் கேங்கர்ஸ்...முழு விமர்சனம் இதோ
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதல் எதிரொலி! 1500 பேர் அதிரடி கைது! ஆக்சனில் இறங்கிய இந்தியா
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதல் எதிரொலி! 1500 பேர் அதிரடி கைது! ஆக்சனில் இறங்கிய இந்தியா
தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
மதத்தின் அடிப்படையில் தீவிரவாதம் – இந்தியா கொடுக்கப்போகும் பதிலடி! அண்ணாமலை காட்டம்!
மதத்தின் அடிப்படையில் தீவிரவாதம் – இந்தியா கொடுக்கப்போகும் பதிலடி! அண்ணாமலை காட்டம்!
பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மூடப்படும் அட்டாரி எல்லை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி!
பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு!
IPL 2025 MI vs SRH: ரோகித் ருத்ரதாண்டவம்! மும்பை மீண்டும் மிரட்டல் வெற்றி! கவலைக்கிடத்தில் ஹைதராபாத்!
IPL 2025 MI vs SRH: ரோகித் ருத்ரதாண்டவம்! மும்பை மீண்டும் மிரட்டல் வெற்றி! கவலைக்கிடத்தில் ஹைதராபாத்!
"சும்மா விட மாட்டோம்" பயங்கரவாதிகளுக்கு எதிராக சூளுரைத்த ராஜ்நாத் சிங்
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
Embed widget