மேலும் அறிய

'ஆன்லைன் ஆதீனமாக' மாறும் நித்தியானந்தா...!- பொருட்படுத்தாத மதுரை ஆதீன நிர்வாகம்...!

’நித்தியானந்தா என்ன கூப்பாடு போட்டாலும் எடுபடாது. வரும் 23ம் தேதி சுந்தர மூர்த்தி தம்பிரானுக்கு முறைப்படி ஆதீனமாக முடி சூட்டப்படும்"

மதுரை ஆதினத்தின் 292-வது ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 13ஆம் தேதி மறைந்த நிலையில் மதுரை ஆதினத்தின் '293-வது பீடாதிபதி நான் தான்' என கூறி கடந்த சனிக்கிழமை முதல் ’கைலாசா நாடு’ என்ற பெயரில் தினசரி நித்யானந்தா தனது முகநூலில் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தான் மதுரை ஆதீனத்தின் 293-வது சன்னிதானமாக  பதவியேற்று கொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஆன்லைன் ஆதீனமாக' மாறும் நித்தியானந்தா...!- பொருட்படுத்தாத மதுரை ஆதீன நிர்வாகம்...!
மேலும்  கடந்த 2012-ஆம் ஆண்டு ஏற்கனவே அருணகிரிநாதரால் தான் இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தான் ஆதீனமாக பொறுப்பேற்ற நிலையில் கைலாசா நாட்டு ஆதீன மட செயல்பாடுகளின் வழிகாட்டுதல் குறித்தும் 8 பக்க அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கை தொடர்பாக சீடர்களின் மூலம் வீடியோவாக வெளியிட்டு விளக்கம் அளித்தும்வரும் நித்யானந்தா மதுரை ஆதினத்தின் 292-வது சன்னிதானமான அருணகிரிநாதர் மறைவை அடுத்து கைலாசா நாட்டில் துக்கம் அனுசரிப்பதாகவும், 293- மதுரை ஆதீனம் என கூறி தனக்கான பெயரை 293-வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Madurai Adheenam: Announcements by Kailash  Nithiyananda on the demise of Arunagirinathar
 
மதுரை ஆதினத்தின் 292-வது சன்னிதானம் மறைந்த நிலையில் 293-வது மடாதிபதியான  'ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள்' எனப்படும் சுந்தர மூர்த்தி தம்பிரான் நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகம் நடத்தப்பட்டு விரைவில் பட்டம் சூட்ட உள்ள நிலையில் நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Madurai Adheenam: ஆதீன மடத்தில் அருணகிரிநாதர் பூதஉடல்: மதுரையில் குவிந்த மடாதிபதிகள்; அடுத்த ஆதீனம் ‛ரெடி’!
மேலும் மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
 
இது குறித்து மதுரை ஆதீனம் ஊழியர்கள் சிலர் நம்மிடம்...," கடந்த 2012-இல் மதுரை நித்தியானந்தாவை ஆதீனமாக அருணகிரிநாதர் அறிவித்தார். ஆனால் அவர் மீது கடும் சர்ச்சை எழுந்த உடன் அதனை திரும்பப் பெற்றார். உயர்நீதிமன்றமும் நித்தியானந்தாவை ஆதீனத்திற்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்திருந்தது. தற்போது கைலாசாவிற்கு தப்பி ஓடிய நித்தியானந்தா மதுரை ஆதீனத்தை சொந்தம் கொண்டாட நினைத்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அருணகிரிநாதர் முறையாக 293 ஆதீனத்தை அறிவித்துவிட்டார். அதனால் நித்தியானந்தா என்ன கூப்பாடு போட்டாலும் எடுபடாது. வரும் 23ஆம் தேதி சுந்தர மூர்த்தி தம்பிரானுக்கு முறைப்படி ஆதீனமாக முடி சூட்டப்படும்" என்றனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget