மேலும் அறிய

தமிழகத்தில் மேலும் ஒரு விமான நிலையம்? - நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்! மத்திய அரசின் பதில் இதுதான்! 

அங்கு இருக்கும் விமான ஓடுபாதையைப் பயன்படுத்தி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் இப்போதைய நிலை என்ன? 

உளுந்தூர்ப்பேட்டையில் விமான நிலையம் அமைப்பது குறித்து மத்திய அரசு முக்கிய பதிலை தெரிவித்துள்ளது. 

விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் இன்று நாடாளுமன்றத்தில் உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.  

அதில், ”உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்கவும்  உடான் திட்டத்தின் கீழ் இணைப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

அங்கு இருக்கும் விமான ஓடுபாதையைப் பயன்படுத்தி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் இப்போதைய நிலை என்ன? 

உளுந்தூர்பேட்டையில் இருக்கும் விமான ஓடு பாதையை விமான நிலையமாக மாற்றுவதற்கு என்னென்ன கட்டமைப்பு வசதிகளை அரசு மேற்கொள்ள இருக்கிறது? 

உளுந்தூர்பேட்டை விமான ஓடுபாதையை உடான் திட்டத்தின் கீழ் இணைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா ? அந்த ஆய்வின் பரிந்துரைகள் யாவை?” ஆகிய கேள்விகளை முன் வைத்தார். 

இதற்கு விமான போக்குவரத்துதுறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார். அந்த பதிலில் “ தமிழ்நாட்டில் உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுபாதை பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் ( RCS) உடான் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.  

பிராந்திய இணைப்புத் திட்டமானது தேவையின் அடிப்படையில் ஏலத்தின் அடிப்படையில் விமான நிலையங்கள் அமைப்பதற்கான  நடவடிக்கைகளை எடுக்கும் திட்டமாகும் 

உடான் திட்டத்தின் கீழ் இதுவரை ஐந்து முறை ஏலம் நடத்தப்பட்டுள்ளது.  ஆனால் உளுந்தூர்பேட்டை விமான ஓடு பாதையைப் பயன்படுத்தி அங்கு விமான நிலையம் அமைப்பதற்காக யாரும் ஏலம் கேட்கவில்லை. அதனால் அங்கு விமான நிலையம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை”  என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இதுகுறித்து எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒன்றிய அரசிடம் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பலமுறை இதுகுறித்து வலியுறுத்தி விட்டேன். உளுந்தூர்பேட்டை விமான ஓடுபாதையைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெரிகிறது. 

எனவே, ஒன்றிய அரசின் வசம் உள்ள அந்த இடத்தை மாநில அரசு குத்தகைக்குப் பெற்று அங்கு விமான பயிற்சி நிலையமோ, ட்ரோன் உற்பத்தித் தொழிற்சாலையோ, திறந்த வெளி தானியக் கிடங்குகளோ, குளிர்பதனக் கிடங்குகளோ, தொழிற்சாலையோ அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

அரசு பயன்படுத்தாத நிலையில் அந்த இடம் பலராலும் ஆக்கிரமிக்கப்படுவதோடு, ஓடுபாதையும் சேதமாகிக்கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget