மேலும் அறிய

மணல் கொள்ளையை விஞ்சும் கூழாங்கற்கள் கொள்ளை - ஆரோவில் அருகே பறிபோகும் தமிழகத்தின் கனிமவளம்...!

பொக்லைன் மூலம் 25 அடி ஆழத்திற்கும் மேலாக தோண்டி எடுக்கப்படும் கூழாங்கற்கள், ஒரு டன் 18ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே செம்மண் நிலப்பரப்பில் பல அடி ஆழம் தோண்டி கூழாங்கற்கள் எடுத்து கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டதில் சர்வதேச நகரமாக ஆரோவில் அமைந்துள்ளது. இப்பகுதி முழுதும் பல ஏக்கர் பரப்பளவில் செம்மண் நிலப்பகுதியாக உள்ளது. இங்கு மானாவாரி பயிராக முந்திரி அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த நிலப்பரப்பில் கூழாங்கற்கள் அதிகளவில் புதைந்துள்ளன. இதனால் விவசாயம் செய்யமுடியாது என நினைத்த விவசாயிகள், நிலங்களை குத்தகை மற்றும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.


மணல் கொள்ளையை விஞ்சும் கூழாங்கற்கள் கொள்ளை - ஆரோவில் அருகே பறிபோகும் தமிழகத்தின் கனிமவளம்...!

நிலத்தை வாங்கியவர்கள் மண்ணில் கூழாங்கற்கள் வளம் உள்ளதை கண்டுபிடித்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அனுமதியின்றி கூழாங்கற்களை, தோண்டி எடுத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக வானுார் அடுத்த ராயபுதுப்பாக்கம் பனைமரத்தோப்பில் இருந்து மாத்துாருக்குகுறுக்குப் பாதையில் செல்லும் காட்டுமேடு பகுதியில் பொக்லைன் மூலம் பல இடங்களில் 25 அடி ஆழத்திற்கு மேல் தோண்டி எடுக்கின்றனர். இதற்காக நிலத்தில் இடையூறாக இருக்கும் முந்திரி மரம், பனை மரம், தைலமரம் ஆகியவற்றையும் வெட்டி அகற்றுகின்றனர். தோண்டி எடுக்கப்படும் கூழாங்கற்களை சல்லடை மூலம் சலித்து மண், சிறிய கற்கள், பெரிய கற்கள் என ரகம் பிரிக்கின்றனர். சிறிய கற்களுக்கு சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை பகுதியில் அதிகம் கிராக்கி இருப்பதால் இதற்கு அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். சிறிய மற்றும் பெரிய கற்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு டன் 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பகிரங்கமாக இயற்கை வளம் கொள்ளை போவதை வருவாய் துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.


மணல் கொள்ளையை விஞ்சும் கூழாங்கற்கள் கொள்ளை - ஆரோவில் அருகே பறிபோகும் தமிழகத்தின் கனிமவளம்...!

இந்த கூழாங்கற்களை ஆழ்துளை கிணறு, பூங்கா, மழை நீர் சேகரிப்பு, தொழிற்சாலை மற்றும் பங்களா வீடுகளின் அழகிற்காகவும் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து பள்ளம் தோண்டி கூழாங்கற்கள் எடுப்பதால், விரைவில் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கனிமவளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வானுார் பகுதியில் இயற்கை வளத்தை பாதுகாக்க முடியும். அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கூழாங்கற்கள் கொள்ளை போவது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் நன்கு தெரியும். ஆனால், கூழாங்கற்கள் குவாரி உரிமையாளர்கள் மாதம் தோறும் அதிகாரிகளை முறையாக கவனித்துவிடுவதால் கண்டு கொள்வதில்லை.


மணல் கொள்ளையை விஞ்சும் கூழாங்கற்கள் கொள்ளை - ஆரோவில் அருகே பறிபோகும் தமிழகத்தின் கனிமவளம்...!

சில முக்கிய புள்ளிகள், இந்த கூழாங்கற்கள் குவாரியை நடத்துகின்றனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் இந்த குவாரிகளில் 200க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பகல் நேரங்களில் கனிம வளத்துறை அதிகாரிகள் வருவதை கண்காணிக்க தனியாக ஒரு குழுவே செயல்படுகிறது. பகல் நேரங்களில் கூழாங்கற்கள் தோண்டும் பணியும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக கடத்தும் பணியும் கனக்கச்சிதமாக நடந்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
தகர கொட்டகை அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
தகர கொட்டகை அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
Embed widget