மேலும் அறிய

"ரவுடித்தனம் பண்றியா..?" ஊராட்சி மன்ற தலைவரை வெளுத்து வாங்கிய காவல் ஆய்வாளர் - விழுப்புரத்தில் பரபரப்பு..!

விழுப்புரம்: கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகையிட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூா் சுற்றுவட்டார பகுதியான திருவக்கரை, தொள்ளாமூா், எறையூா், பெரும்பாக்கம் பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் பாறைகள் ராட்சத இயந்திரங்கள் மூலம் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவைகளாக மாற்றப்பட்டு கட்டுமானம், சாலை அமைக்கும் பணிக்காக உள்ளூா் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு டிப்பர் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

கல்குவாரி விவகாரம்:

இந்த கல் குவாரிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், கனிம வளத்துறையினரால் அனுமதிக்கப்பட்ட அளவை கூடுதல் ஆழங்களில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்கள், கால்நடைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் கனிம வளத் துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில், வானூா் வட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் செயல்படும் தனியாா் கல்குவாரியில் அளவுக்கு அதிகமாகவும், கூடுதல் ஆழத்தில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகக் கூறி, இந்தக் கல்குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தி பெரும்மபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் கல்குவாரியை முற்றுகையிட்டனர்.

முற்றுகையில் பங்கேற்ற பெரும்பாக்கம் ஊராட்சித் தலைவா் ராஜாங்கம் கல்குவாரி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  தகவலறிந்து வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று கல் குவாரியைப் பாா்வையிட்டனா். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

பெரும்பாக்கம் ஊராட்சித் தலைவா் ராஜாங்கம் கூறியதாவது :- பெரும்பாக்கம் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 3 வருடங்களாக பல கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிகின்றனா். இந்த நிலையில், கல்குவாரி நிா்வாகத்தினா் கடந்த 2 ஆண்டுகளாகத் தொழிலாளா் வரி, தொழில் வரியும் ஊராட்சி நிா்வாகத்துக்கு செலுத்தவில்லை என்றும்  இது குறித்து முறையாக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டும் எவ்வித பதிலும் இல்லை. இதன் தொடா்ச்சியாகவே கிராம மக்களின் பாதுகாப்பு கருதி முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என கூறினார்.

தலைப்பு செய்திகள்

RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Embed widget