சுங்கச்சாவடியில் விசிக நிர்வாகிகள் அட்டகாசம்; ரவுண்டு கட்டி தூக்கிய போலீஸ்... நடந்தது என்ன ?
சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்லலும் தனி வழியில் தன்னுடைய காரை அனுமதிக்கவில்லை என விசிக மாவட்ட செயலாளர் சுங்கசாவடி பூத் மற்றும் அலுவலகத்தை உடைத்தனர்.

விழுப்புரம் : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மயிலம் விசிக மாவட்ட செயலாளர் திலீபன், தனது காரினை ஆம்புலன்ஸ் செல்லும் வழிப்பாதை செல்ல சுங்கசாவடி ஊழியர் அனுமதிக்காததால், அவர்களிடம் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி சுங்கச்சாவடி பூத் மற்றும் அலுவலக கண்ணாடியை உடைத்து அட்டகாசம், அலுவலகத்தை உடைத்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு தனி வழி அமைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அவசர கால வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் எளிதாக செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது போன்ற வாகனங்களுக்கு தனி வழி ஏற்படுத்த நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த மயிலம் மாவட்ட செயலாளராக உள்ள திலீபன் மற்றும் மயிலம் ஒன்றிய செயலாளர் கார்மேகம் ஆகிய இருவரும் மயிலத்திலிருந்து விழுப்புரம் நோக்கி காரில் வந்துள்ளனர். விக்கிரவாண்டி சுங்கசாவடி அருகே வந்தபோது ஆம்புலன்ஸ் செல்லும் வழியாக சுங்கசாவடியை விசிகவினர் கடக்க முயன்றுள்ளனர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர் ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் அனுப்ப இயலாது என காரினை மறித்துள்ளனர்.
இதனையடுத்து காரிலிருந்து இறங்கி ஊழியர் தினேஷிடம் மாவட்ட செயலாளர் காரை அனுப்பமாட்டியா என வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதமானது கைகலப்பாக மாறி ஒன்றிய செயலாளர் கார்மேகமும் சுங்கசாவடி ஊழியர் தினேஷ் குமார் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். சண்டையிட்டவர்களை சுங்கச்டாவடி ஊழியர்களும், வாகன ஓட்டிகளும் விலக்கி விட்ட பின்னர் விசிக நிர்வாகிகள் 30 க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடிக்கு வந்து ஊழியர்களுடன் சண்டையிட்டு சுங்கச்சாவடி அலுவலக கண்ணாடி மற்றும் சுங்கசாவடி பூத் கண்ணாடியை உடைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரனை செய்து சுங்கச்சாவடி கண்ணாடியை உடைத்த விசிகவினரை கைது செய்ய முற்பட்டபோது விசிகனர் சுங்கசாவடியில் மறியலில் ஈடுபட முயன்றனர். அதனை தொடர்ந்து ஏ டி எஸ் பி தினகரன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியும் கலைந்து செல்லாம் வாக்குவாதம் செய்ததால் விசிகவினை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் சுங்கச்சாவடியில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.





















