மேலும் அறிய

சாமானிய வணிகர்களை அச்சுறுத்தும் கார்ப்பரேட் - விக்கிரமராஜா

வரி வசூல் என்பது அதிகப்படியான சுமையை மக்களுக்கும், வணிகர்களுக்கும் தந்து வருகிறது. இலவசங்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் சாமானிய வணிகர்களை அச்சுறுத்தி கொண்டுள்ள கார்ப்பரேட் மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் வியாபாரிகள் காணாமல் போகும் அவலம் ஏற்படும் என கரூரில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.


சாமானிய வணிகர்களை அச்சுறுத்தும் கார்ப்பரேட் - விக்கிரமராஜா

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் உள்ள கரூர் மாவட்ட நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா வணிகர் சங்க கொடியை ஏற்றி வைத்து, நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில் அவர் கூறியதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு சார்பில் 42-வது மாநில மாநாடு வரும் மே, மாதம் 5 ஆம் தேதி சென்னை மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதில் 5 லட்சம் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்போம் என தீர்மானித்து உள்ளனர். தமிழக அரசு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுமானால் உடனடியாக ஆயுள் தண்டனை என்ற சிறப்பு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்த அறிவிப்பு தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கும் வகையில் பெண்களுக்கு பாதுகாப்பான சட்டமாக அமைய உள்ளது. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி.


சாமானிய வணிகர்களை அச்சுறுத்தும் கார்ப்பரேட் - விக்கிரமராஜா

இந்தியா முழுவதும் சாமானிய வணிகர்களை அச்சுறுத்தி கொண்டு உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் வியாபாரிகள் காணாமல் போகும் அவலம் ஏற்படும். எனவே வணிகர்களை பாதுகாக்க மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். குப்பை வரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வேறுபட்டு உள்ளது. அதை முறைப்படுத்த வேண்டும். வரி வசூல் என்பது அதிகப்படியான சுமையை மக்களுக்கும், வணிகர்களுக்கும் தந்து வருகிறது. இலவசங்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும். காலாவதியான டோல்கேட்டுகளை அகற்றுவோம் என மத்திய அரசு அறிவித்தது. அதனை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை போல் ஆண்டுதோறும் டோல்கேட் கட்டணத்தை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் அனைத்து அமைப்புகளையும் இணைத்து தமிழகம் தழுவிய அளவில் டோல்கேட் முன்பு போராட்டத்தை கையில் எடுப்போம். இனக்கவரி செலுத்துகின்றவர்களுக்கு 18 சதவீதம் வாடகை விகிதத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு புதிய வரி சுமைகளை போட்டு மக்களை வாட்டி வதைக்க வேண்டாம். 


சாமானிய வணிகர்களை அச்சுறுத்தும் கார்ப்பரேட் - விக்கிரமராஜா

கரன்சி முறையை முழுமையாக ஒலித்து விட வேண்டும் என்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பை ஒருமுனை வரியாக்க வேண்டும். உள்நாட்டு வணிகர்கள் மட்டும் ஆன்லைன் வணிகம் செய்ய வேண்டும். வெளிநாட்டவர்களின் ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும். சாமானிய வணிகர்களுக்கு வங்கி மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி
தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
7 மாதங்களில் 10,309 உயிர்கள் பலி.. தமிழகத்தில் அரங்கேறும் பயங்கரம்! பின்னணி என்ன?
7 மாதங்களில் 10,309 உயிர்கள் பலி.. தமிழகத்தில் அரங்கேறும் பயங்கரம்! பின்னணி என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Embed widget