மேலும் அறிய

தைலாபுரம் தோட்டத்தில் பயிற்சி எடுத்தவன் நான்! - திமுக-வை கிழித்தெறிந்த வேல்முருகன்!

பனையூரில் காத்திருந்த விஜய். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றார். லெட்டர் பேடு கட்சி கூட செல்லவில்லை - வேல்முருகன்

விழுப்புரம்: மருத்துவர் ராமதாசும், அன்புமணியும் இணைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்: கதவை திறந்து வைத்து பனையூரில் காத்திருந்த விஜய். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றார். லெட்டர் பேடு கட்சி கூட செல்லவில்லை: விழுப்புரத்தில் வேல்முருகன் பேச்சு.

விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய கட்சியின் தலைவர் வேல்முருகன்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் கட்சி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு. 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் இயக்கமாக வளர்ந்துள்ளது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை தேர்வு செய்து நேர்காணல் நடத்தி பட்டியலை தயார் செய்து எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என தயாராக இருந்தேன். அதற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக திமுகவில் இருந்து வெளியேறுகிறோம் என அறிவித்தேன். எங்களுக்கு சீட்டை விட, தமிழ் சமூகத்திற்காக கோரிக்கை தான் முதன்மையானது.

வேல்முருகன் நம்மோடு இருந்தால் மிகப்பெரிய கொடைச்சலாக இருப்பார் என்று கணக்கு போட்டு. பேச்சுவார்த்தையில் சில இடங்களை கேட்டோம் தர மறுத்தார்கள். கடைசியாக ஏற்கனவே பெற்ற ஒரு தொகுதியை பெற்றுக் கொண்டு சட்டமன்ற உறுப்பினராக உள்ளே வாருங்கள் என்றார்கள். நாங்கள் கொடுப்பது சீட்டு இல்லை சட்டமன்ற உறுப்பினர் பதவி என கூறினார்கள. உங்கள் சீட்டும் தேவையில்லை. நோட்டும் தேவையில்லை. கதவு இரண்டையும் திறந்து வைத்து விட்டு பனையூரில் விஜய். கூட்டணியில் இணைந்தால் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றார். ஒருவரும் அங்கு செல்லவில்லை. லெட்டர் பேடு கட்சி கூட செல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகள் என்னை நோக்கி வந்துள்ளன.

சமூக நீதி வழி வந்த அரசு எனக் கூறிக் கொள்ளும் திமுக. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி உரிய இட ஒதுக்கீட்டை வழங்குவதை யார் தடுத்தது. உங்களை இயக்குகிற ஆர்எஸ்எஸ். சங்பரிவார் கும்பல்கள் தடுத்தது என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். நீங்கள் மார்த்தட்டி சொல்லும் திட்டங்களுக்கு சட்டமன்றத்தில் ஆலோசனை கூறியவன் வேல்முருகன். இன்றைக்கு சில தலைவர்கள் நேராக முதல்வர் இருக்கையில் தான் உட்காருவேன் என சில தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

நான் தைலாபுரம் தோட்டத்தில் பயிற்சி எடுத்தவன். பாவம் மருத்துவர் ராமதாசுக்கு இந்த நிலைமை. அதனை நினைத்தால் வேதனையாக உள்ளது. மருத்துவர் அன்புமணியிடம் இருவரும் இணைய வேண்டும் என கூறினேன். இருவருக்கும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் தயவுசெய்து இருவரும் ஒன்றாக இணைந்து ஏழை மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். பலர் இன்றைக்கு பாமகவை விமர்சிக்கிறார்கள். அதனை கேட்கும் போது எங்களுக்கு வேதனையாக உள்ளது என பேசினார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன்:

 

25 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளேன். விரைவில் மூன்றாம் கட்ட பட்டியல் வெளியிடப்படும். 234 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளுடன் பேசி மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும். 

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு கேமரா சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என கேட்டுக்கொள்கிறேன்.  எங்கள் கூட்டணியில் 40 அரசியல் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 234 தொகுதிகளிலும் கேமரா சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம். 50 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி தந்துள்ளோம். 

 

பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு: பண்ருட்டி தொகுதி நிர்வாகிகளோடு கலந்து பேசி இறுதியான முடிவை அறிவிக்க இருக்கிறேன். மருத்துவர் ராமதாசும், அன்புமணியும் இணைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இருவரும் இணை வேண்டிய காலத்தின் கட்டாயம். அப்பா, மகனுக்கான இந்த பிரச்சனையில் பலர் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த கட்சியின் தொண்டர்களின் எதிர்காலம், கட்சி வளர்ச்சிக்கான எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறிக ஆகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் வைக்கப்பட்ட வேண்டுகோள்.  மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவர் இடையேயும் கணிசமான வாக்குகள் உள்ளது. இருவரும் இணைந்தால் வாக்குகள் குறைவதற்கான வாய்ப்பு இல்லை.

பாமக எப்போதும் வளர்ந்துவிடக் கூடாது. சமூக நீதி வளர்ந்து விடக்கூடாது என்பவர்களுக்கெல்லாம் இது சாதகமானது. தமிழ்நாட்டில் கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட போகிறது. அரசியலில் நாளுக்கு நாள் நிலைமை மாறி வருகிறது. எது வேண்டுமானாலும் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உள்ள தேர்தலாக இது அமையப்போகிறது.

யாராலும் கணிக்க முடியாத தேர்தல் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கணிக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு திமுக, பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ளுமா என்ற கேள்விக்கு: இரண்டு கம்யூனிஸ்டுகள். திருமாவளவன் இருக்கும் வரை அதனை அனுமதிக்க மாட்டார்கள். அப்படி அமைவதற்கு இவர்கள் இடைஞ்சலாக இருப்பதாக திமுக கருதினால் எனக்கு ஏற்பட்ட நிலைமையை அவர்களுக்கு ஏற்படும். அந்நேரத்தில் அந்த கட்சிகள் உரிய முடிவை எடுக்கும். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதத்தின் பெயராலும், இந்து, இந்தியா, இந்தி மொழி என்ற பெயரால், மொழி வழி தேசிய இனங்களையும், ஒற்றுமையாக வாழும் இந்நாட்டில் மக்களை பிளவுபடுத்துகிற பாரதிய ஜனதா என்கிற அரசியல் கட்சி எடுக்கிற அரசியல் நகர்விற்கு தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் தலைமையும் உடன்படக்கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள். என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK: விசிலை பாத்து அலறிய உத்தம புருசர்.. தீய சக்தியும்- தீர்ந்துப் போன சக்தியும்! அட்டாக் மோடில் தவெக
TVK: விசிலை பாத்து அலறிய உத்தம புருசர்.. தீய சக்தியும்- தீர்ந்துப் போன சக்தியும்! அட்டாக் மோடில் தவெக
ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம் ; உடந்தையாக இருந்த பெண் உட்பட 3 பேர் கைது
ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம் ; உடந்தையாக இருந்த பெண் உட்பட 3 பேர் கைது
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
" அப்பா ஆட்சி நடப்பதாக உதயநிதி நினைக்கிறார் " அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
Embed widget