மேலும் அறிய

யார் அந்த சார்? - திரும்ப திரும்ப திமுக அரசை சீண்டும் திருமா! கூட்டணியில் மீண்டும் சிக்கலா?

அந்த வகையில் அண்ணா பல்கலை வளாகத்தில், பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட, அந்த குற்றச்செயல் வேதனையை உண்டுபண்ணியிருக்கிறது. 

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் உள்நோக்கமின்றி போராட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “மலேசியா பிணாங்கு பகுதியில் ஜனவரி 4 மற்றும் 5ஆம் தேதிகளில் உலகத் தமிழர் வம்சாவளி மாநாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக மலேசியா செல்கிறேன். பல அரசியல் கட்சி தலைவர்களும் அதில் பங்கேற்கின்றனர். அமைச்சர் பெருமக்களும் பங்கேற்கின்றனர்.   தொழிலதிபர்களும் இரண்டாவது நாள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ள சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என விசிக தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம், வேண்டுகோளும் விடுத்திருக்கிறோம். அந்த வகையில் அண்ணா பல்கலை வளாகத்தில், பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட, அந்த குற்றச்செயல் வேதனையை உண்டுபண்ணியிருக்கிறது. 

கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி வேறு நபர்கள் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. ஆகவே அரசு குறிப்பாக காவல்துறை நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்கக் கூடாது. அவரை சிறையில் வைத்தபடியே புலன்விசாரணையை முடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். 

யார் அந்த சார் என்ற கேள்விக்குத்தான் நேர்மையான விசாரணை தேவை என்று வலியுறுத்துகிறேன். போராட்டம் நடத்த முழுமையாக அனுமதி மறுக்கப்படவில்லை. அனுமதி கொடுக்கப்பட்டு சில போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. இதே பிரச்சினைக்கு பலர் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இதைவைத்து அரசியல் செய்ய வேண்டும் என சிலர் போராட்டங்களில் ஈடுபட முயல்கின்றனர். அரசு அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைப்பதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் அரசு, எதிர்க்கட்சிகளுக்கு போராட வாய்ப்பு தர வேண்டும் என்பதே விசிகவின் வேண்டுகோள்” எனத் தெரிவித்தார். 

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் யாரிடமோ போனில் சார் என்று பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியதாக புகார் எழுந்தது. அதனால் யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அதிமுக, பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. அந்த வரிசையில் தற்போது விசிக தலைவர் திருமாவளவனும் நியாயமான விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்தாலும் அவ்வபோது பல்வேறு பிரச்சினைகளில் அரசுக்கு எதிரான கேள்விகளை முன் வைத்து போராட்டங்களும் நடத்தி வருகிறது. இதனால் கூட்டணியில் சிக்கலா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதற்கு பதிலளித்த திருமா கூட்டணியில் சிக்கல் இல்லை என தெரிவித்து வந்தார். 

ஏற்கெனவே அரசுக்கு எதிராக மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி விசிக பேசுபொருளாக மாறியது. அதையடுத்து அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் திருமா பங்கேற்க கூடாது என திமுக அழுத்தம் கொடுத்ததாகவும் இதனாலேயே திருமா அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார் எனவும் சொல்லப்பட்டது. இதுமட்டுமில்லாமல் விசிக, தவெக கூட்டணிக்கோ அதிமுக கூட்டணிக்கோ மாற வாய்ப்பு உள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். 

இந்த நிலையில் தான் அதிமுக பாஜக முன்வைக்கும் அதே பிரச்சினையை திருமாவும் முன் வைத்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
கோபாலபுரம் சென்று கலைஞர் தலையை வெட்டுவேன் சொன்ன கிருஷ்ணசாமி! கலைஞர் கொடுத்த மாஸ் ரிப்ளை!
கோபாலபுரம் சென்று கலைஞர் தலையை வெட்டுவேன் சொன்ன கிருஷ்ணசாமி! கலைஞர் கொடுத்த மாஸ் ரிப்ளை!
அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதன் ஆன்மீக இரகசியங்கள் தெரியுமா உங்களுக்கு?
அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதன் ஆன்மீக இரகசியங்கள் தெரியுமா உங்களுக்கு?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
Embed widget