![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'அநாதையா போட்டுட்டு ஊர சுத்துர' தாயின் வார்த்தைகளால் கலங்கிப்போன திருமா! வருத்தத்துடன் ட்வீட்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
!['அநாதையா போட்டுட்டு ஊர சுத்துர' தாயின் வார்த்தைகளால் கலங்கிப்போன திருமா! வருத்தத்துடன் ட்வீட்! vck leader and chidambaram mp thirumavalavan mother admitted hospital 'அநாதையா போட்டுட்டு ஊர சுத்துர' தாயின் வார்த்தைகளால் கலங்கிப்போன திருமா! வருத்தத்துடன் ட்வீட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/25/68ac40c1b77a7f74745578947172f318_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளது. அந்த கட்சியின் தலைவர் திருமாவளவனின் தாயார் பெரியம்மாள். வயது மூப்பு காரணமாக தற்போது உடல்நலக்குறைவாக உள்ளார். அவர் தன்னுடைய சொந்த ஊரான அரியலூரில் உள்ள தன்னுடைய வீட்டிலே வசித்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பெரியம்மாள் தானே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார். தகவலறிந்த திருமாவளவன் உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது தாயை சந்தித்துள்ளார். அப்போது, திருமாவளவனிடம் அவரது தாயார் ஊரில் தன்னை தனியாக விட்டுவிட்டு, நீ ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறாய். திடீரென்று இரவு நெஞ்சு வலி வந்துவிட்டதாகவும், பின்னர் தானே மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், உயிர் போகும்போது நீ உடனிருந்தால் போதும் என்று கூறியுள்ளார்.
#அம்மா: "ஊர்ல என்ன அநாதையா போட்டுட்டு நீ ஊர சுத்திக்கிட்டுருக்கிற; திடீர்னு எனக்கு நெஞ்ச அடச்சுகிட்டு ஆவி பிரியுற மாதிரி வலி வந்துச்சு; நானே முயற்சி பண்ணி நடுராத்திரில ஆஸ்பத்திரிக்குப் போனேன். உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்"
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 24, 2022
அம்மா இப்படி சொன்னபோது
அடிவயிறு கலங்கியது. pic.twitter.com/3g1rG1IcDL
தாயின் இந்த வார்த்தைகளால் திருமாவளவன் மனம் உடைந்துள்ளார். தனது தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள திருமாவளவன், “ஊர்ல என்ன அநாதையா போட்டுட்டு நீ ஊர சுத்திக்கிட்டுருக்கிற; திடீர்னு எனக்கு நெஞ்ச அடச்சுகிட்டு ஆவி பிரியுற மாதிரி வலி வந்துச்சு; நானே முயற்சி பண்ணி நடுராத்திரில ஆஸ்பத்திரிக்குப் போனேன். உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்" அம்மா இப்படி சொன்னபோது அடிவயிறு கலங்கியது “ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
திருமாவளவனின் இந்த பதவிற்கு பலரும் உருக்கமாக பதிலளித்து வருகின்றனர். மேலும், தாயுடன் உடனிருங்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர். பொது வாழ்வில் நுழைந்த திருமாவளவன் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஓட்டெடுப்பு நடத்தி தலைமையை நிரூபிக்க தயாரா? - அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி சவால்
மேலும் படிக்க : Congress Office Attack: திடீர்னு உள்ளே வந்த கும்பல்! அடிதடி பரபரப்பு! ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)