![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
’பெட்ரோல், டீசல் விலையில் முதல்வர் பிடிவாதம் பிடிக்கிறார்’ - வானதி சீனிவாசன் தாக்கு
”தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது என்று தமிழக முதல்வர் பிடிவாதம் பிடித்து வருகிறார். மாநில அரசு தங்களது வரி வருவாயை குறைக்காமல் மத்திய அரசை குறை கூறி வருவதில் எந்த நியாமுமில்லை”
![’பெட்ரோல், டீசல் விலையில் முதல்வர் பிடிவாதம் பிடிக்கிறார்’ - வானதி சீனிவாசன் தாக்கு Vanathi Srinivasan said the state government to reduce petrol and diesel prices like the central government ’பெட்ரோல், டீசல் விலையில் முதல்வர் பிடிவாதம் பிடிக்கிறார்’ - வானதி சீனிவாசன் தாக்கு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/25/4ad2493f41be20f644c11d322a92500a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல் ,டீசல் விலையை குறைத்து தங்களது வரி வருவாயை குறைத்தது போல், மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் மக்களுக்காக தங்களது வரி வருவாயை மத்திய அரசு குறைத்து போல், மாநில அரசும் மக்களுக்காக வரி வருவாயை குறைத்து கொள்வதில் தவறில்லை. தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது என்று தமிழக முதல்வர் பிடிவாதம் பிடித்து வருகிறார். மாநில அரசு தங்களது வரி வருவாயை குறைக்காமல் மத்திய அரசை குறை கூறி வருவதில் எந்த நியாமுமில்லை.
அதேபோல மத்திய அரசு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மூலப்பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அரசியல் ஆதயாத்திற்காக கூட்டாச்சி தத்துவம் குறித்து மாநில அரசு தவறாக, பொதுமக்களிடம் பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது. தனிப்பட்ட ஆதயத்திற்காக மோடி அரசை திமுக எதிர்க்கிறது. கொரோனாவால் தொழில் முடங்கினாலும் வரி வருவாயை அதிகரித்து மாநில அரசுக்கு நிதியை, மத்திய அரசு வழங்கி வருகிறது.
மாநிலத்தின் தலைநகரிலே ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது என்பது, தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விக் குறியாகி உள்ளதை காட்டுகிறது. அதேபோல் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மிரட்டல் அதிகரித்து வருகிறது. திமுகவினர் சமூக நீதி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை வார்த்தைகளில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த போது சில அதிகாரிகளை நியமனம் செய்வதன் மூலம் நேர்மையான தோற்றத்தை இருப்பதை போல காட்டியது. ஆனால் அண்மை காலமாக ஒவ்வொரு அமைச்சர் இலாக்காவில் குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்து கொண்டு அரசு வேலைக்கு கமிசன் வேண்டுமென கேட்கின்றனர். இதனை வெளியிட்ட விகடன் நிறுவனத்தின் மீது வழக்கு போட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் ஊடகங்களை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்கிற போக்கு தற்போது திமுக விற்கு வந்துள்ளது. இன்னும் 4 வருட காலம் ஆட்சி எப்படி இருக்குமென பயமாக இருக்கிறது. ஏன் திமுக விற்கு வாக்களித்தோம் என மக்கள் நினைக்கின்றனர்” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)