மேலும் அறிய

ஆன்லைன் வகுப்புக்குச் செல்லாமல் கால்நடை மேய்க்கும் மாணவர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காததால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாமல் கால்நடைகளை மேய்க்கும் மாணவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில், மலைவாழ் மக்கள் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மரம் வெட்டுதல், கூலி வேலைக்கு செல்வது, ஆடு மேய்த்தல் போன்ற பல்வேறு வேலைகளை செய்து வாழ்கையை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று ஊரடங்கு காரணமாக பல்வேறு நிலைகளில் பொதுமக்கள் பெரிதும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்றல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக பாடங்கள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தனர். தற்போது வரை  பள்ளிகள் திறக்கப்படாததால் பல மாணவர்கள் கூலி வேலைக்கு செல்லும் சூழலலிற்கு தள்ளப்பட்டன.
பாதிரி கிராமத்தை சேர்ந்த செல்வி என்ற பள்ளி மாணவி , கூலித்தொழிலாளியான தந்தைக்கு உதவியாக ஆடு மேய்த்து வருகிறார். 

 


ஆன்லைன் வகுப்புக்குச் செல்லாமல் கால்நடை மேய்க்கும் மாணவர்கள்!

 


"இது தொடர்பாக அந்த பள்ளி மாணவி செல்வி கூறுகையில்", '

நாங்கள் இருளர் சமூகத்தை சார்ந்தவர்கள் எங்கள் கிராமத்தில் நாங்கள் 20 குடும்பங்கள் வசித்து வருகிறோம், எங்கள் சமுதாயத்தை சார்ந்தவர்கள் அதிக அளவில் படிக்காமல் வீட்டின் வறுமையை போக்க கூலி வேலைக்கு செல்கின்றனர். தற்போது நாங்கள் தான்  எங்கள் பகுதியில் உள்ள பெண் பிள்ளைகளில் அதிக அளவில் படித்து வருகிறோம்.

 நான் 9ம் வகுப்பு படித்து வந்தேன்.  திடிரென இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றால்  பள்ளிகள் மூடப்பட்டன. இனால் நாங்கள் பள்ளிற்கு செல்லாமல் இருந்தோம் வீட்டில் இருந்த படியே பாடங்கள் படித்து தேர்வுக்கு தயாராகி வந்தோம். திடீரென தமிழக அரசு  அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிக்கப்பட்டனர். 9வகுப்பு முடித்து விட்டு 10 வகுப்பிற்கு சென்றேன். அப்போது மூன்று மாதங்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தினர். கொரோனா 2- வது அலை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு ஆன்லைன்மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. 


ஆன்லைன் வகுப்புக்குச் செல்லாமல் கால்நடை மேய்க்கும் மாணவர்கள்!

ஆனால் எங்கள் குடும்பத்தில் போதிய வசதி இல்லாததால் எங்களால் செல்போன் வாங்கி ஆன்லைன் வகுப்பில் இணைந்து படிக்க முடியவில்லை. இதனால் எங்களால் படிக்கமுடியவில்லை, இந்த ஆண்டும் படிக்காமலே தேர்ச்சி அடைந்தோம்.இதனால் எங்கள் பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் பேனா பிடித்து எழுத வேண்டிய கைகளில் கால்நடைகளை மேய்த்து வருகிறோம். 

பள்ளிக்கு செல்லாமலும் படிக்காமலும் தேர்ச்சி அடைந்தோம், மேலும் எங்கள் ஊரில் உள்ள சிறு பிள்ளைகள் பள்ளிகள் திறக்காத நிலையில் பாடம் பயில முடியாமல், கல்வியை பெற முடியாமல் அவர்களுக்கு தங்களுடைய பெயரைக் கூட எழுத தெரியவில்லை. மேலும் மாணவ, மாணவிகள் தாங்கள் கற்ற கல்வியை மறக்கக் கூடிய மோசமான நிலையில் உள்ளனர். இதனால் இளம் மாணவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி வருகிறது என மன மனவேதனையுடன் தெரிவித்தார். இதனால் அரசு உடனடியாக பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget