யார் இந்த வெற்றிவேல்? - முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னணி; சி.டி.ஆர் நிர்மல் குமார் ஓப்பன் டாக்
"தேர்தலின் போது நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் எங்கள் தலைவர்கள் நிறைவேற்றுவார்கள்" - சி.டி.ஆர் நிர்மல் குமார்

தவெக செய்தித் தொடர்பாளர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தமிழக முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு, அவர், நீண்ட காலமாக எங்கள் ஊடக செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார் என்று சி.டி.ஆர் நிர்மல் குமார் என்று விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது.
இதுதொடர்பாக தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், “தமிழக மக்கள் எங்கள் தலைவர் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு வாக்களித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில், நாங்கள் அரசுக்கான பெரும்பான்மையைக் காட்டியுள்ளோம். 144 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இது ஒரு மக்கள் அரசாக இருக்கும். தேர்தலின் போது நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் எங்கள் தலைவர்கள் நிறைவேற்றுவார்கள். இந்தத் தேர்தலில் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர், அந்த மாற்றத்திற்காக அவர்கள் வாக்களித்துள்ளனர்” என்றார்.
தமிழக முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக (OSD) தவெக செய்தித் தொடர்பாளர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவர் எங்கள் ஊடகவியலாளர். அவர் ஏற்கனவே ஒரு ஊடக செய்தித் தொடர்பாளர். யார் வேண்டுமானாலும் அவரவர் தொழிலைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் நீண்ட காலமாக எங்கள் ஊடக செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார். அவர் ஊடகத்துறையில் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறார். அவர்களின் தனிப்பட்ட தொழில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அவர் எங்கள் ஊடகவியலாளர்” என்று கூறினார்.
சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக (OSD) தவெக செய்தித் தொடர்பாளர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் பிரேமலதா உள்பட பல எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















