மேலும் அறிய

திருப்பதி செல்ல நினைப்பவர்கள் கவனத்திற்கு... தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் முக்கிய அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

திருப்பதி செல்ல நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா காரணமாக சிறப்பு தரிசனம், இலவச தரிசனம் உள்ளிட்ட அனைத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் கோடை விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரங்கள் ஆவதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

சாதாரண மக்கள் ஏழுமலையானை தரிசிக்க வசதியாக இம்மாதம் கடைசி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விஐபி தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகமாவதால் ஒருவருக்கு 2 லட்டுகள் கூடுதலாக வழங்கப்படுகிறது. சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசனம், நடைபாதை வழியாக வரும் பக்தர்கள் என திருப்பதியே ஸ்தம்பித்து போயுள்ளது. 

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் திருப்பதி செல்ல நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையிலிருந்து திருமலை செல்ல விரும்பும் பக்தர்களுக்காக ஒருநாள் திருப்பதி சுற்றுலாவை தினசரி சென்னையிலிருந்து இயக்கி வருகிறது. இதற்கு முன்னால் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பயண டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் முறை நடைமுறையில் இருந்தது. ஆனால் திருப்பதிக்கு வருகை தரும் வெளிமாநில பக்தர்களின் விவரங்களை 7 நாட்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

இதனைக் கருத்தில் கொண்டு 2 நாட்கள் என்ற நடைமுறையை 7 நாட்களாக மாற்றியுள்ளதால் திருப்பதி சுற்றுலாவை பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் 7 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், மேலும் விவரங்களுக்கு 044 -2533 3333, 044 -2533 3444, 1800- 42531111 ஆகிய எண்களை கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
விவசாயிகளின் நண்பன் சிலந்திகள்... தீமை செய்யும் பூச்சிகளை வேட்டையாடும் வேட்டைக்காரன்
விவசாயிகளின் நண்பன் சிலந்திகள்... தீமை செய்யும் பூச்சிகளை வேட்டையாடும் வேட்டைக்காரன்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget