TN PowerShutdown: சுட்டெரிக்கும் கோடை.. மின் தடை அபாயம்! மின்வாரியத்தின் அதிரடி செக்! பொறியாளர்களுக்கு பறந்த உத்தரவு
TN PowerShutdown: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மாலை நேரத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், மின்தடைப் புகார்களைக் கையாள்வது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
கோடையில் மின் நுகர்வு அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் ஏசி பயன்பாடு அதிகரிப்பதால் மின்மாற்றிகள் மற்றும் மின் விநியோகப் பெட்டிகள் போன்ற சாதனங்களில் அதிக மின்பளு ஏற்பட்டு, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மாலை நேரத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சமாக 21,060 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மின்வாரியத்தின் அதிரடி உத்தரவு
பொதுமக்கள் வெயிலால் அவதிப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, மின் தளவாடங்களில் ஏற்படும் பழுதுகளை வெறும் 30 நிமிடங்களுக்குள் சரி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் தனது பொறியாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மின்தடை ஏற்பட்டவுடன் மாற்று வழித்தடங்கள் மூலமாகவோ அல்லது பழுதுகளை விரைவாக நீக்கியோ உடனடியாக மின் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என்பது இந்த உத்தரவின் முக்கிய நோக்கமாகும்.
மாற்று வழித்தட மின் விநியோகம்
மின் விநியோகக் கட்டமைப்பில் ஒரு வழித்தடத்தில் பழுது ஏற்பட்டாலும், இரண்டாவது வழித்தடம் வழியாக மின்சாரத்தை அனுப்பும் தொழில்நுட்ப வசதி உள்ளது. அதேபோல் ஒரு மின்மாற்றியில் சிக்கல் உண்டானால் மற்றொரு மின்மாற்றி வாயிலாக மின்சாரத்தை வழங்க முடியும். எனவே ஏதேனும் ஒரு பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், காலதாமதம் செய்யாமல் மாற்று வழிகளில் மின்சாரத்தை வழங்க பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
துரித நடவடிக்கைக்கான ஏற்பாடுகள்
பழுது நீக்கும் பணிகளை தடையின்றி மேற்கொள்ள தேவையான மாற்று சாதனங்களை நேரடியாகவே கொள்முதல் செய்து கொள்ள பிரிவு அலுவலகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, ஒவ்வொரு அலுவலகத்திற்கும் தலா 5 முதல் 8 தற்காலிகப் பணியாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கூடுதல் மனிதவளத்தைப் பயன்படுத்தி அரை மணி நேரத்திற்குள் மின்தடையைச் சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்























