மேலும் அறிய

பள்ளி அளவில் எழும் புகார்களை விசாரிக்க, POSH சட்டத்தின் கீழ் பள்ளிகளில் குழு - மாநில குழந்தைகள் கொள்கை அறிக்கை 2021

பாதுகாப்பான குழந்தைநேய சுற்றுச்சூழலை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்பான குழந்தைநேய சுற்றுச்சூழலை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

எல்லாக் குழந்தைகளும் மகிழ்ச்சியானதொரு குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதற்கு தகுதியுடையவர்கள். மேலும் வன்முறை, சுரண்டல், தவறாக நடத்தப்படுதல் (சொல், உடல், மனம், பாலியல் ரீதியாக உள்ளிட்டஅனைத்து விதத்திலும்), புறக்கணிப்பு, அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் இருப்பது மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பாகவும். கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கும் தகுதி உடையவர்கள்; எனினும், உலகம் முன் எப்போதையும் விட வேகமாக மாறி வருகிறது. 

அதைப்போலவே குழந்தைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சவால்களுடன் வாய்ப்புகளும் மாறி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பெரும்பாலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; உலகளாவியவை.

தமிழ்நாட்டில் குழந்தைகள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வுகாணவும், அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தனது கடமையை உறுதியாகக் கடைப்பிடிக்கவும், அதற்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை அடையவும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை - 2021ஐ உருவாக்கியுள்ளது.

அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை அனுபவிக்கவும் மற்றும் வன்முறை, சுரண்டல், புறக்கணிப்பு, பற்றாக்குறை மற்றும் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெற தகுதியுடையவர்கள் என்பதை அரசு அங்கீகரிக்கிறது.

அதே நேரத்தில், மாநிலத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தங்கள் உரிமைகளைப் பெறவும் அவர்களுக்குப் பாதுகாப்பான குழந்தைநேய சுற்றுச்சூழலை உருவாக்க தேவையான அடித்தளத்தை அமைக்கவும் தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது.

எனவே மாநில அரசு பின்வரும் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

1. பல்வேறு வகையில் தவறாக நடத்தப்படுதல் (உடல், உணர்வு, பாலியல், புறக்கணிப்பு, மறுப்பு மற்றும் இணையவழி சார்ந்த), பாகுபாடு, சுரண்டல், வன்முறை அல்லது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது அவர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் எல்லா செயல்பாடுகளிலிருந்தும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சமூகம் சார்ந்த கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நிலைநிறுத்துதல்.

2. தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கு எதிரான எந்த விதமான வன்முறைக்கும் முற்றிலும் சகிப்புத்தன்மையற்ற எனும்
கொள்கையை கடைப்பிடிக்கிறது. மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளைத் தடுப்பதற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது.  

3. தமிழ்நாடு முழுவதும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடங்களை உருவாக்குவதற்காக அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற
அமைப்புகளில் குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கையை அறிமுகப்படுத்துதல் மற்றும் கடைபிடித்தல்.

4. அனைத்துப் பள்ளிகளையும் குழந்தைகள் பாதுகாப்புக்கு உகந்ததாக மாற்ற குழந்தைப் பாதுகாப்புக் கொள்கையை அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்துதல்.

5. பள்ளி அளவில் எழும் புகார்களை விசாரிக்க, பாலியல் ரீதியாக தவறாக நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு சட்டத்திலிருந்த (றிளிஷிபி) சட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் புகார் குழுவை அமைத்தல்.

6. தற்போதுள்ள குழந்தைப் பாதுகாப்பு அமைப்புகளை, குறிப்பாக கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு (க்ஷிலிசிறிசி) மற்றும் அருகாமை குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களை வலுப்படுத்துதல்.

7. குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள், அந்த வன்முறைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்மறைத் தாக்கம், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அவர்கள் அணுக வேண்டிய சட்டங்கள்/ நிறுவனங்கள், போன்றவற்றிற்கு அணுக வேண்டிய அமைப்புகள் குறித்து அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற அனைத்து வகையான ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தல்.

8. அனைத்து குழந்தைகளின் (பாலினம், மதம், மொழி, சாதி, மாற்றுத்திறன் மற்றும் மன ரீதியான குறைபாடு, சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு அனைவருக்கும்) உரிமைகள் மற்றும் கண்ணியம் (மாண்பு) எப்போதும் நிலைநிறுத்தப்படுவதை உறுதிசெய்தல்.

9. பாதுகாப்பான, மரியாதையான பராமரிப்பு, குழந்தை நேய, பொதுக் கற்றல், ஊடக மற்றும் இணைய வெளிகளை உருவாக்குதல்.

10. சிறப்பு கவனம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு உரித்தானவற்றை அவர்கள் பெறுவதை உறுதிப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.  

11. குடும்பப் பராமரிப்பு / மாற்றுப் பராமரிப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவன பராமரிப்பை கடைசி முயற்சியாகக் கருதுதல்.

12. அனைத்துக் குழந்தைப் பராமரிப்பு நிறுவனங்களிலும் பாதுகாப்பு மற்றும் பொறுப்புறுதியை மிக உயர்ந்த தரத்தில் அமல்படுத்துதல்.

13. குற்றத்தடுப்பு மற்றும் பொறுப்பான எதிர்வினையாற்றும் ஒரு குழந்தை பாதுகாப்பு அமைப்பைக் கட்டமைத்தல், பல்வேறு வகையில் தவறாக நடத்தப்படுதல், புறக்கணித்தல், பாகுபாடு, சுரண்டலுக்கு எதிராக நிர்வாக செயல்பாடுகள். மற்றும் சட்டங்களை திறம்பட அமலாக்கம் செய்வதையும் ஊக்குவித்தல்.

14. குழந்தைகளின், குறிப்பாக சிறப்பு கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய பொருத்தமான மற்றும் திறன்மிக்கவர்களாக்க குழந்தைகள் பாதுகாப்புக் கட்டமைப்புகள் மற்றும் திட்டங்களை வலுப்படுத்துதல்.

15. தங்களின் பாதுகாப்புக்கென இருக்கும் சேவைகள் மற்றும் அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் மேம்படுத்துதல்.

16. ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் திறன் வாய்ந்த குழந்தைப் பாதுகாப்பு அமைப்பு பல்வேறு துறைகளுடன் இணைந்து திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துதல்.

17. குழந்தைகள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் கண்டறிந்து, தலையிட்டு தீர்வு காண கிராமம், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான அமைப்புகளை உருவாக்குதல்.

18. மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த-சமூக ஆதரவில் சிறப்புக் கவனம் செலுத்தி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் கீழ் மறுவாழ்வு சேவைகளை தரம் உயர்த்துதல்.

19. பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாகச் செயல்படும் குழந்தைகளின் தனியுரிமையை உறுதி செய்தல்; அவர்கள் தொடர்பான தரவுகளை ரகசியமாக வைத்திருத்தல்.

20. கண்காணிப்பு, மதிப்பீடு செய்தல் மற்றும் முடிவெடுப்பதை மேம்படுத்துவதற்கு, நிகழ்காலத் தரவை வழங்க, தரவுக் களஞ்சியம் மற்றும் தரவு மேலாண்மை அமைப்புகளின் தயார்நிலையை வலுப்படுத்துதல்.  

21. நிறுவனங்களுக்குள் குழந்தைகள் வருகையைத் தடுக்கவும் குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டு நிறுவனங்களுக்குள் மீண்டும் வருவதைத் தடுக்கவும் குடும்ப அமைப்புகளை வலுப்படுத்தும் சேவைகளை உருவாக்குதல்.

22. குறிப்பாக, குழந்தைப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த விழிப்புணர்வு சாதனங்களை (தகவல், கல்வி) உருவாக்கி அதன் மூலம் சமூக விழிப்புணர்வை அதிகரித்தல்.

23. பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் குழந்தைகள் மீண்டும் பாதிக்கப்படாமல் தடுத்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு செய்தல்.

24. நிறுவனப் பராமரிப்பை விட்டு வெளியேறும் குழந்தைகள் சுயசார்பு பெறும் வரை அவர்களுக்குப் தொடர் பராமரிப்புச் சேவைகளை பலப்படுத்தல்.

25. குழந்தைப் பாதுகாப்புக் கொள்கை உருவாக்கும் போது சரியான முடிவுகள் எடுப்பதை மேம்படுத்துவதற்காக அவ்வப்போது மதிப்பீடுகள், ஆய்வு மற்றும் சமூகத் தணிக்கைகளை நடத்துதல்.

26. குழந்தைகளைப் பாதுகாப்பதற்கென்றே பிரத்யேகமாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல்.

27. பல்வேறுபட்ட நிலைகளில் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குறைதீர் அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல்.

சர்வதேச குழந்தைகள் தினமான இன்று இந்தத் தகவலைத் தெரிந்து கொள்வதோடு, பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார் !! ஜூன் 1 - முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வா ? டோல்கேட் கட்டண உயர்வு
வாகன ஓட்டிகளே உஷார் !! ஜூன் 1 - முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வா ? டோல்கேட் கட்டண உயர்வு
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
சென்னை சிறுவன் விவகாரம்; தவெக அரசின் 'லா அண்ட் ஆர்டர்' லட்சணத்தைக் கிழித்த டிடிவி தினகரன்!
சென்னை சிறுவன் விவகாரம்; தவெக அரசின் 'லா அண்ட் ஆர்டர்' லட்சணத்தைக் கிழித்த டிடிவி தினகரன்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget