மேலும் அறிய

PTR Palanivel Thiagarajan: ஜிஎஸ்டி அமைப்பு சீர்திருத்தம்- நிர்வாகக் குழுவில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்

ஜிஎஸ்டி முறையின் கீழ் வருவாய் இழப்பை தடுத்திடும் வகையில்  தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பில் மாற்றம் கொண்டுவருவது போன்ற நோக்கங்களை ஜிஎஸ்டி நிர்வாகக் குழு கொண்டுள்ளது.

ஜிஎஸ்டி அமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த ஜிஎஸ்டி மன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்த பிடிஆர், "ஜிஎஸ்டி அமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த ஜிஎஸ்டி மன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஒன்றிய நிதியமைச்சர் மற்றும் கவுன்சிலுக்கு எனது நன்றிகள்!. வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்களையும் என்னையும் தமிழ்நாட்டில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பணியாற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் சொல்லியிருந்தார். தற்போது இந்திய அளவிலான செயல்முறையை மேம்படுத்த நண்பர்கள் மற்றும் சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறேன்” என்று பதிவிட்டார்.   


PTR Palanivel Thiagarajan: ஜிஎஸ்டி அமைப்பு சீர்திருத்தம்- நிர்வாகக் குழுவில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்
PTR Palanivel Thiagarajan: ஜிஎஸ்டி அமைப்பு சீர்திருத்தம்- நிர்வாகக் குழுவில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்

வரித்துறை அதிகாரிகளுக்கு ஜிஎஸ்டி அணுகலை எளிமைப்படுத்துவதற்கான, நவீனப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வகுப்பது; ஜிஎஸ்டி முறையின் கீழ் வருவாய் இழப்பை தடுத்திடும் வகையில்  தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பில் மாற்றம் கொண்டு வருவது, ஒழுங்குமுறை பின்பற்றுதல், நிதியாதாரங்களைப் பெருக்குதல் செயல்படுத்துவதற்கு தரவுகளைக் கொண்டு விரிவான பகுப்பாய்வு பணியை தொடங்குவது; மாநில, மத்திய அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான கட்டமைப்பை உருவாக்குவது போன்ற நோக்கங்களை இந்த குழு கொண்டுள்ளது.  

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தக் குழுவில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த சவுதாலா, அசாம் மாநில நிதியமைச்சர் அஜிதிங் நியோங், சத்தீஸ்கர் மாநில வர்த்தக அமைச்சர் டி.எஸ்.சிங் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஒடிசா மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் பிடிஆர், "சிறிய அளவில் வரி செலுத்துவோர் மீது ஜிஎஸ்டிக்கு இணங்கும் சுமை சமமற்ற வகையில் ஏறியுள்ளது. இதற்கு தெளிவற்றதன்மையும் போதிய தொழில்நுட்பம் இல்லாததும்தான் காரணம். என் கலந்துரையாடல்களின் போது, ஜிஎஸ்டி வரி செலுத்துவோர், குறிப்பாக சிறு வர்த்தகர்கள், தங்கள் பயனர் கணக்குகளை பயன்படுத்துவதில் உள்ள சிரமத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினர்.

GSTN தளத்தில் அனைத்து உள்ளடக்கமும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதே அதற்கு காரணம். இதன் வினைவாக, சிறு வணிகர்கள் "வரி ஆலோசகர்களின்" சேவைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது அவர்களின் செலவை அதிகரிப்பதோடு, அவர்களின் வரிக்கணக்குகளை சமர்பிப்பதில் முழு கட்டுப்பாடு இல்லாத நிலையும் ஏற்படுகிறது. தமிழ்நாடு வணிகத்திற்கு உகந்த மாநிலமாக உள்ளது. பெரிய & சிறு குறு வணிகர்கள் என அனைவருக்கும் ஆதரவான சூழலை வழங்க விரும்பும் மாநிலம். தமிழ்நாடு GST அமல்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் சேவைகளை தமிழ் மொழியில் வழங்க எந்த கணிசமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஜிஎஸ்டி தொடர்பான சேவைகளை தமிழ் வழியில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை எங்கள் அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது. எனவே, சேவைகளை தமிழில் விரைவாக வழங்க GSTN-க்கு உத்தரவிடுமாறு இந்த மாமன்றத்தை வலியுறுத்துகிறோம். படிவங்களையும் & தளம் சார்ந்த விவரங்களையும் மொழிபெயர்க்க உதவுவதாக ஏற்கனவே GSTN இடம் அறிவித்துள்ளோம். இவ்விஷயத்தில் நேர்மறையான ஒரு பதிலை GSTN இடம் இருந்து எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.     

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget