மேலும் அறிய

’நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - அதிரடி உத்தரவுபோட்ட டிஜிபி’ அதிர்ச்சியில் போலீசார்..!

'ஓய்வு பெறப்போகும் காவலர்கள், உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தல்’

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், புதிய உத்தரவை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவால் தமிழ்நாடு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.’நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - அதிரடி உத்தரவுபோட்ட டிஜிபி’ அதிர்ச்சியில் போலீசார்..!

டிஜிபி போட்ட உத்தரவு - 10 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க ஆணை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் காவலர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், தாங்கள் புதிதாக எந்த மாவட்டத்திற்கு அல்லது எந்த புதிய காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்படப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் காவலர்கள் உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை

நாடாளுமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதால், அனைத்து மாநில டிஜிபிக்களுக்கும் ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அதில், நாடாளுமன்ற தேர்தல் எந்த பாரபட்சமும் இன்றி நடைபெற, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவலர்களையும் அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே டிஜிபி இந்த புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

வழக்கமான நடைமுறை - பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சிரமம் ?

இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும் மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றி அந்தந்த ஊரில் செட்டில் ஆகிவிட்ட காவலர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காவலர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடங்களையும் அவர்கள் குடும்பத்தார் அதே பகுதியில் பணியில் இருந்தால் அவர்களையும் மாறுதல் செய்து அழைத்துப் போக வேண்டிய சூழலுக்கு காவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஓய்வு பெறவுள்ள காவலர்களுக்கு விலக்கு அளிக்க உத்தரவு

அதே நேரத்தில் பணி ஓய்வு பெறவுள்ள காவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு தேர்தல் பணிகள் எதையும் ஒதுக்க வேண்டாம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் தன்னுடைய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

10ஆம் தேதிக்குள் பட்டியலை தர வேண்டும் - டிஜிபி சங்கர் ஜிவால்

சொந்த மாவத்தில் பணிபுரியும் காவலர்கள் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அதற்கான பட்டியலை ஜனவரி 10ஆம் தேதிக்குள் தயாரித்து தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் மண்டல ஐ.ஜி.க்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளவர்களுக்கு சலுகை ?

உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்கள், பணிட மாற்றத்தால் ஏதும் பிரச்னைகள சந்திக்கும் காவலர்கள் தங்கள் கோரிக்கைகளை கடிதம் மூலம் தெரிவிக்கவும் இந்த முறை வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரான்ஸ்பர்

இந்நிலையில், இன்று தலைமை காவலர்கள், முதுநிலை காவலர்கள் என 1,847 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், சென்னையில் பணியாற்றிய 340 காவலர்கள் பிற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget