![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CM Stalin EXCLUSIVE Interview: செந்தில் பாலாஜியின் பதவி பறிப்பா? உதயநிதி எப்படி ? - முதலமைச்சரின் மெகா எக்ஸ்குளுசிவ்! 11 மணிவரை காத்திருங்கள்!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி பறிக்கப்படுமா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ( CM MK Stalin EXCLUSIVE Interview to ABP Nadu: )பிரத்யேகமாக பதிலளித்துள்ளார்.
![CM Stalin EXCLUSIVE Interview: செந்தில் பாலாஜியின் பதவி பறிப்பா? உதயநிதி எப்படி ? - முதலமைச்சரின் மெகா எக்ஸ்குளுசிவ்! 11 மணிவரை காத்திருங்கள்! TN CM MK Stalin EXCLUSIVE Interview to ABP Nadu Out July 21 11 AM Senthil Balaji Dismissal Udhayanidhi Stalin CM Stalin EXCLUSIVE Interview: செந்தில் பாலாஜியின் பதவி பறிப்பா? உதயநிதி எப்படி ? - முதலமைச்சரின் மெகா எக்ஸ்குளுசிவ்! 11 மணிவரை காத்திருங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/d651bbe49207f9ba9656e48198cc6aa81689864506906732_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி பறிக்கப்படுமா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேகமாக பதிலளித்துள்ளார்.
ஏபிபி செய்திதளம்..!
ஊடகத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட ஏபிபி நிறுவனம், தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு இணையதளங்கள் வாயிலாக பொதுமக்களிடையே நாட்டின் அன்றாட நிகழ்வுகளை கொண்டு சேர்க்கும் முடிவுடன் இணைய ஊடகத்தில் களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான், கடந்த 2021ம் ஆண்டு ஏபிபி நாடு எனும் இணைய செய்தி தளம் அறிமுகமானது. அதன் மூலம் தமிழ் மக்களுக்கான செய்திகளை வேகமாகவும், துல்லியமாகவும் வழங்கி வருகிறது. இந்நிலையில், உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஏபிபி நாடுவின் பணியை ஊக்குவிக்கும் விதமாக முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில் மக்கள் மனதில் தொடரும் சந்தேகங்களை ஏபிபி நாடு கேள்வியாக எழுப்ப, முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு விரிவான பதில்களை தந்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட கேள்விகள்:
குற்றமற்றவர் என உறுதியாகும் வரை செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா, தொடர்ந்து பேசுபொருளாவதன் மூலம் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளதா, வெளிநாடு பயணத்தின் பலன் என்ன, உதயநிதியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பன போன்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டன.
முதலமைச்சர் ஸ்டாலின் பதில்..!
ஏபிபி தரப்பில் முன்வக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி விவகாரத்தில் தவறு செய்தது யார் என விளக்கமளித்துள்ளார். பாஜகவிற்கு தெரிந்ததெல்லாம் இது மட்டுமே என விமர்சித்துள்ளார். வெளிநாடு பயணத்தின் பலன் எப்போது தெரியும், உதயநிதியின் செயல்பாடு எப்போது தெரியும்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமாக பேசியுள்ளார்.
இன்று காலை 11 மணிக்கு..
மக்கள் சார்பில் ஏபிபி-யால் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விரிவான பதில்கள் இன்று காலை 11 மணியளவில் முழுமையாக வெளியாக உள்ளன. அதுதொடர்பான செய்திகளையும், வீடியோக்களையும் காண, ஏபிபி நாடு செய்தி தளம் மற்றும் ஏபிபி நாடு யூடியூப் சேனலுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)