மேலும் அறிய

DMK Congress: அடம்பிடிக்கும் கை.. அதிக தொகுதி கேட்கும் காங்கிரஸ் - என்னதான் காரணம்?

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் தங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழக அரசியல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றனர். பலமான கூட்டணியாக உள்ள திமுக ஆட்சியைத் தக்கவைப்பதற்காகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிமுக-வும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மற்றொரு பக்கம் தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

அதிக தொகுதிக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்:

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ்  கட்சியினர் அதிக தொகுதிகளை கேட்போம் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள மிகப்பெரிய தேசிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டில் அவர்களது செல்வாக்கு பெரியளவில் இல்லை. ஆனாலும், அவர்கள் அதிக தொகுதிகள் கேட்பதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளது.

என்ன காரணம்? 

கடந்த தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்ற  காங்கிரசுக்கு 25 தொகுதிகள் வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய 2016 தேர்தலில் வெறும் 8 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக வரும் தேர்தலில் அதிக தொகுதிகளில் பாேட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. 

இதைக் காட்டிலும் காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் விஜய். அரசியல் கட்சி தொடங்கியது முதலே விஜய் பலருக்கும் கூட்டணி அழைப்பு விடுத்தும் யாரும் முன்வரவில்லை. திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்து அவர் இதுவரை முன்வரவில்லை. மேலும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற விஜய்யின் டீல் காங்கிரசை கவர்ந்தாலும் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் திமுக கூட்டணியை விட்டு வெளியேறக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சிலர் விஜய் கூட்டணி பக்கம் செல்ல வலியுறுத்தி வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி திமுக-விடம் அதிக தொகுதிகளை கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு:

அதன் எதிரொலியாகவே தற்போது காங்கிரஸ் தரப்பினர் அதிக தொகுதிகள் வேண்டும் வெளிப்படையாகவே பேட்டி அளித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் திமுக கூட்டணியில் நீண்ட காலம் அங்கம் வகித்து வருகிறோம், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது அனைத்து காங்கிரஸ்காரர்களின் கனவாக இருக்கும். 

கூடுதல் தொகுதிகள் கேட்போம் என நேற்று பேட்டி அளித்தார். மேலும், இந்த தேர்தலில் அதிக தொகுதிகள் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்களும் கட்சித் தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.

திமுக-வின் முடிவு என்ன?

காங்கிரஸின் கோரிக்கையை திமுக ஏற்குமா? அல்லது திமுக ஒதுக்கும் தொகுதியை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுமா? அல்லது தொகுதி பங்கீடு விவகாரம் கூட்டணியை பாதிக்குமா? என்பதை எதிர்காலமே தீர்மானிக்க உள்ளது. காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என மிகப்பெரிய கூட்டணி பட்டாளத்தை வைத்துள்ள திமுக தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்வதில் சவால் இருந்தாலும், தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Annamalai: ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
Akash Choudry: அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்..! அடி.. அடி.. அன்பீலிவபிள் அடி - உலக சாதனை படைத்த இந்தியர்!
Akash Choudry: அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்..! அடி.. அடி.. அன்பீலிவபிள் அடி - உலக சாதனை படைத்த இந்தியர்!
10 பவுன் நகை பறித்து சென்ற வழக்கில் 2 பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
10 பவுன் நகை பறித்து சென்ற வழக்கில் 2 பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
Embed widget