மேலும் அறிய

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய போக்சோ வழக்கு: நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராக காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு.

17 வயது  சிறுமியை கர்ப்பமாக்கிய போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராக காவல் ஆய்வாளருக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017 ஆண்டு திருவாரூர் மாவட்டம் வேளூரை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வந்தார். அங்குள்ள மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி விடுமுறை நாட்களில் திருப்பூரில் உள்ள சித்தப்பா பாண்டி வீட்டுக்கு சென்று திரும்புவார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பவரோடு மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதே வருடம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார். பள்ளிக்கு சென்ற மாணவியை செல்வம் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று, பலமுறை பலவந்தப்படுத்தி உறவு கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திருவண்ணாமலை போளூர் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் இருவருக்கும், செல்வம் தரப்பினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு  தான் கர்ப்பமாக இருப்பதாக செல்வத்திடம் மாணவி தெரிவித்துள்ளார்.

கர்ப்பபை அகற்றம்

இதையடுத்து அவரது கர்ப்பத்தை கலைக்கும் முயற்சியில் மாணவியை அடித்து வயிற்றில் தாக்கியுள்ளனர். இதனால் மயங்கிய மாணவி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்து உரிய சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து மாணவி திருப்பூரில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்ற போது, அங்கு அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக ஸ்கேன் பரிசோதனையில் செய்ததில் மாணவியின் கர்ப்பபை அகற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் அதிர்ந்த மாணவி தரப்பினர் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அப்போது வழக்கு தொடர்பாக எப்,ஐ,ஆர். பதிவு செய்த உதவி ஆய்வாளர் கமல்ராஜ், தற்போது பதவி உயர்வில் சீர்காழியில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த வழக்கு தற்போது  திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், வழக்கில் சாட்சி கூற ஆய்வாளர் கமல்ராஜூக்கு 15 முறை நீதிமன்றம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் நீதிமன்றத்து வரவில்லை.
இறுதியாக சம்மனில் அவர் கையெழுத்திட்ட பிறகும் கூட ஆஜராகவில்லை. இதையடுத்து மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் ஆய்வாளர் கமல்ராஜூக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
Embed widget