மேலும் அறிய

கார்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்; வெளியேற்றப்பட்ட செய்தியாளர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விஐபிகள் பற்றி பேசுகிற அதிகாரிகள் செய்தியாளர்களை வெளியே அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் முக்கியமான விழாவாகும். கொரோனா தளர்வுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ்; கடந்த ஆண்டுகளில் தீபத்திருவிழாவின் மலைமீது ஏற்றப்படும் நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியின் போது அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் காட்சி அளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அப்போது வி.ஐ.பி.களும், வி.வி.ஐ.பி.களும் மட்டுமே கோவில் வளாகத்தில் இருப்பார்கள் என்று கூறினார்.

 


கார்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்; வெளியேற்றப்பட்ட செய்தியாளர்கள்

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரும் போது சாமானிய பக்தர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இடம் ஒதுக்கீடு ஆனால் ஆலோசனை கூட்டத்தின் போது வி.ஐ.பி.களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது, அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடு, இருக்கைகள் வைப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. வழக்கமான முன்னேற்பாடு பணிகளான கோவில் வளாகத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, கிரிவலப்பாதையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பேஸ் டிராக்கிங் மென்பொருள் பொருத்துவது, கிரிவலப்பாதையில் காண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது, பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், தற்காலிக பேருந்து நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், தீபத்தன்று பக்தர்களின் வசதிக்கு ஏற்ப பேருந்துகள் இயக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தீபத் திருவிழாவின் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் இவைகள் அனைத்தும் தற்போது வரக்கூடிய பௌர்ணமி நாள் அன்று அனைவரும் தீபத் திருவிழா ஒத்திகை போன்று நடத்தவேண்டும். 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 


கார்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்; வெளியேற்றப்பட்ட செய்தியாளர்கள்

மேலும், 3 ஆயிரம் பேருந்துகள் 6 ஆயிரம் முறை சென்று வர போக்குவரத்து துறையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்காலிக பேருந்து நிலையங்களில் சேரும், சகதியும் இல்லாதவாறு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் வி.ஐ.பி.கள் கிரிவலம் செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனால் ஆலோசனை கூட்டத்தில் இருந்து செய்தியாளர்களை பாதியில் வெளியில் அனுப்பப்பட்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget