மேலும் அறிய

கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழப்பு; வனசரக அலுவலர் சொன்ன காரணம் என்ன?

திருச்செந்தூர் கோயிலில் யானை மிதித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் வனசரக அலுவலர்கள் அளித்துள்ள விளக்கத்தை இங்கே காணலாம்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை தாக்கி இருவர் உயிரிழந்தனர். யானைக்கு மதம் பிடிக்கவில்லை என்றும் யானை அருலில் செல்ஃபி எடுத்தது அதை தொந்தரவு செய்வதாக அமைந்ததாக வனசரக அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். 

யானை தாக்கி இருவர் உயிரிழப்பு:

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக சொல்லப்படும் திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமானோர் சென்று வழிபாடு செய்வதுண்டு. இக்கோயிலில் தெய்வானை (26) என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. தெய்வானை யானையிடம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆசி பெறுவது. 

திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் உதயகுமார் (45) என்பவர் தெய்வானை யானையின் உதவி பாகனாக இருந்தார். உதயகுமார் மற்றும் அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பாறசாலை பழகலை சேர்ந்த கிருஷ்ண நாயர் மகன் சிசுபாலன் (58) ஆகிய இருவரும் இன்று (18.11.2024) மாலை 3.10 மணியளவில் யானை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென தெய்வானை யானை சிசுபாலனை தாக்கியுள்ளது. சிவபாலனைக் காப்பறுவதற்காக உதயகுமார் யானைக்கு அருகில் சென்றுள்ளார். தெய்வானை இருவரையும் யானை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

யானை பாகனான உதயகுமார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சைப்பலனின்றி அங்கேயே உயிரிழந்தார்.  
 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 45 நிமிடங்கள் கோயில் நடை சாத்தப்பட்டது. 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த துயர சம்பவம் நடைபெற்றதையடுத்து திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்ற பின் கோயில் நடை திறக்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் தலைமையில், திருச்செந்தூர் வனசரக அலுவலர் கவின் உள்ளிட்ட வனத்துறையினர், டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மனோகரன், பொன்ராஜ், அருண் உள்ளிட்ட கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை பரிசோதனை செய்தனர்.இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

செல்ஃபி காரணமா? விளக்கம் அளித்த வனசரக அதிகாரி

யானைக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட்டது ஏன் என்பது தொடர்பாகவும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக  முழுமையான ஆய்வு மற்றும் விசாரணைக்கு பிறகு முழு அறிக்கை வெளியிடப்படும் என மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் தெரிவித்துள்ளார். 

வன அலுவலர் ரேவதி ரமன் செய்தியாளர்கள் கேட்க கேள்விக்குப் பதில் அளிக்கையில், ”தெய்வானை பெண் யானை. மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை. ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரணம் குறித்து விரைவில் ஆய்வு செய்து அறிக்கை தருகிறோம்.ம. காட்டு விலங்குகளின் மனநிலையை அறிவது, கணிப்பது சாத்தியம் அல்ல. கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது யானை அமைதியாகவே உள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு மேலதிக விபரங்களை தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த வனசரக அலுவலர் கவின் தெரிவிக்கையில், ”பாகனின் உறவினர் சிசுபாலன் தெய்வானை யானை அருகில் நின்று நீண்ட நேரம் செல்ஃபி எடுத்துள்ளார். செல்ஃபியால் ஆத்திரமடைந்து சிசுபாலனை யானை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது; சிசுபாலனை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளது.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
EPS on Alliance: கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
EPS on Alliance: கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
Embed widget