மேலும் அறிய

பயங்கரம்: கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதிச் சின்னாபின்னம் – 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி, 6 பேர் படுகாயம்!

விழுப்புரம் : இருசக்கர வாகனத்தில் கார் மோதாமல் இருக்க கார் ஓட்டுனர் பிரேக் அடித்தபோது கட்டுபாட்டை இழந்து கார் சாலை ஓர மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் மூன்று பேர் உயிரிழப்பு

விழுப்புரம் : இருசக்கர வாகனத்தில் கார் மோதாமல் இருக்க கார் ஓட்டுனர் பிரேக் அடித்தபோது கட்டுபாட்டை இழந்த கார் சாலை ஓர மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானதில் ஒரே குடும்பத்தைச் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

திண்டிவனம் அருகே கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி, 6 பேர் படுகாயம்!

திருவள்ளூர் மாவட்டம், காரமடையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விழுப்புரம் அருகே உள்ள மதுரவீரன் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது, திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடத்து எப்படி ?

காரமடைப் பகுதியில் இருசக்கர வாகன சர்வீஸ் சென்டர் நடத்திவரும் வெங்கடேசன் (வயது 40), தனது மனைவி கல்பனா, தாய் திருப்பாவை, தந்தை கோவிந்தராஜ், இரண்டு குழந்தைகள் (மிதுலா ஸ்ரீ, ஹனன்யா ஸ்ரீ), அக்கா பிருந்தா, மாமா சரவணன் உட்பட மொத்தம் ஒன்பது பேருடன் காரில் விழுப்புரம் அருகே உள்ள மதுரவீரன் கோவிலுக்குச் சென்றுள்ளார். சாமி தரிசனம் முடிந்த நிலையில், இன்று இரவு அவர்கள் அனைவரும் மீண்டும் காரில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

திண்டிவனம் அருகேயுள்ள  தென்பசியார் அருகே  தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது, முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபரின் மீது மோதாமல் இருக்க, கார் ஓட்டி வந்த வெங்கடேசன் காரை திடீரெனத் திருப்பியுள்ளார். இதில்,  கட்டுப்பாட்டை இழந்த கார் , திண்டிவனம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த  மரத்தின் மீது பயங்கரமாக மோதி , சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மூவர் பலி, ஆறு பேர் காயம்

இந்தக் கோர விபத்தில், காரில் பயணித்த வெங்கடேசனின் மனைவி கல்பனா , அவரது தாய் திருப்பாவை, மற்றும் தந்தை கோவிந்தராஜ்  ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த வெங்கடேசனின் இரண்டு பெண் குழந்தைகள்  மிதுலா ஸ்ரீ மற்றும் ஹனன்யா ஸ்ரீ , அவரது அக்கா பிருந்தா, மற்றும் மாமா  சரவணன் ஆகியோர் உடனடியாக மீட்கப்பட்டு, திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற தென்கலவாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கோர விபத்து தொடர்பாக  மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நடந்ததன் காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார்  அரை மணி நேரத்திற்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு , வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர், போலீசார் போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget