மேலும் அறிய

செல் போன் திருடியதாக 15 வயது சிறுவனை கட்டிவைத்து தாக்கிய 3 பேர் கைது.

சுமார் 2 மணி நேரத்திற்கு  3பேரும் ஒயர் மற்றும் புளியமரத்தின் பச்சை குச்சிகளை வைத்து சரமாரியாக தாக்கியதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தேவரிஷி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சௌந்தரராஜன். ராஜகிரி  தம்பதிகளின் ஒரே மகன் சபரி. பெற்றோர் இருவரும் இறந்து விட்ட நிலையில் தற்போது குடியாத்தம் அடுத்த ர. ராமாபுரம் கிராமத்தில் உள்ள அவரது பாட்டி ஆனந்தி அம்மாளிடம் தங்கி, குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் . தற்போது கொரோனா விடுமுறை காரணமாக பள்ளிகளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வருகிறார் சிறுவன் சபரி.   

  செல் போன் திருடியதாக 15 வயது சிறுவனை கட்டிவைத்து  தாக்கிய 3 பேர் கைது.

இந்நிலையில் ர ராமாபுரம் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலை சீரமைக்கும் பணிக்காக , திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் கிராமத்தில் இருந்து 4  பேர் கொண்ட குழு கடந்த ஒரு வரமாக கோயிலில் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் கோயில் வேலைக்கு வந்த ஒருவரது சுமார் 10,௦௦௦ ரூபாய் மதிப்பிலான மொபைல் போன் காணாமல் போய்விட்டது . மொபைல் போனை பறிகொடுத்த நபர் தமக்கு சபரி மேல் சந்தேகம் இருப்பதாக  தெரிவித்துள்ளார் .  

இதை அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த கோபிநாத் (34) , குணா (36) மற்றும் உமாநாத் (33) ஆகியோர் நேற்று மாலை  கோவில் அருகில் விளையாடிக் கொண்டு இருந்த சபரியை ஊர் ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று  சிறுவன் அணிந்திருக்கும் சட்டை, லுங்கி  அனைத்தையும் கழட்டி விட்டு அங்கு இருந்த ஒரு மரத்தில் கட்டி வைத்து  சுமார் 2 மணி நேரத்திற்கு ஒயர் மற்றும் புளியமரத்தின் பச்சை குச்சிகளை வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.  இதில் வலி தாங்க முடியாத சிறுவன் துடிதுடித்து கத்தி உள்ளான்.  

  
இதை அறிந்த கிராமத்தில் உள்ள ஒருவர் குடியாத்தம் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் .  பின்னர் தாசில்தார் சரவணன் உத்தரவின் பெயரில் குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு,  மற்றும் பரதராமி,  சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டனர். அப்போது சிறுவனுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருந்தது. 

 செல் போன் திருடியதாக 15 வயது சிறுவனை கட்டிவைத்து  தாக்கிய 3 பேர் கைது.

சிறுவனை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்த போலீசார் சிறுவனை தாக்கிய கோபிநாத் , குணா , உமாநாத் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் தந்தையை இழந்த 15  சிறுவனை , வெறும் சந்தேகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு கொடூரமாக தாக்கி உள்ள சம்பவம்  கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவன் எவ்வளோ சொல்லியும் அதனை கேட்காமல் தாக்கிய மூவரையும் சிறையில் அடைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
மின்சார வாகனத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கனுமா? அரசே நடத்தும் பயிற்சி முகாம் - எங்கே? எப்போது?
மின்சார வாகனத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கனுமா? அரசே நடத்தும் பயிற்சி முகாம் - எங்கே? எப்போது?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சருக்கு தலைவலி தரும் காவல்துறை.. அடுத்த நடவடிக்கை என்ன?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சருக்கு தலைவலி தரும் காவல்துறை.. அடுத்த நடவடிக்கை என்ன?
Joe Root: காலீஸ், டிராவிட், பாண்டிங் எல்லாம் ஓரம்போ.. வரலாறு படைக்கப்போகும் ஜோ ரூட்!
Joe Root: காலீஸ், டிராவிட், பாண்டிங் எல்லாம் ஓரம்போ.. வரலாறு படைக்கப்போகும் ஜோ ரூட்!
கல்லி கிரிக்கெட்டில் Baby Over இருக்கு... அப்போ சர்வதேச கிரிக்கெட்டிலும் இருக்கு அது எப்படி திமிங்கலம்?
கல்லி கிரிக்கெட்டில் Baby Over இருக்கு... அப்போ சர்வதேச கிரிக்கெட்டிலும் இருக்கு அது எப்படி திமிங்கலம்?
Embed widget