மேலும் அறிய

Dowri Crime: "70 சவரன் நகை போட்டும் பத்தல.." வரதட்சணை கொடுமையால் பறிபோன இளம்பெண் உயிர்..? தூத்துக்குடியில் துயரம்..!

தூத்துக்குடியில் திருமணமான ஓராண்டிற்குள்ளாகவே வரதட்சணை கொடுமையால், இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி லயன் ஸ்டவுன் பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவர் குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெரு பகுதியை சேர்ந்த  கில்பர்ட் என்பவரது மகளும், பட்டதாரியுமான   அனுஷாவிற்கும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.  

70 சவரன் நகை:

இந்த திருமணத்திற்காக  பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில்,  பெண் வீட்டாரிடம்  100 சவரன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டுள்ளனர்.  இதற்கு சம்மதம் தெரிவித்த கில்பர்ட், திருமணத்தின் போது தனது மகளுக்கு 70 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம்  ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையில் முதல் தவணையாக கொடுத்துள்ளார். மீதி 30 சவரன் நகையை சில மாதங்களில் கொடுத்து விடுவதாக கில்பர்ட் உறுதியளித்துள்ளார்.

வரதட்சணை கொடுமை:

திருமணம் ஆகியும் சில மாதங்கள் ஆகியும், கில்பர்ட் சொன்னபடி 30 சவரன் நகையை போடவில்லை என கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, திருமணத்திற்கு முன்பு அளித்த உறுதியின்படி, நகையை முறையாக போடாததால்  அனிஷாவை பிரசாத் மற்றும் அவரது  குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். பிரசாத் வேலைக்காக மீண்டும் குவைத்திற்கு செல்ல, அவரது குடும்பத்தினர் அனிஷாவை பல்வேறு விதங்களில் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.

அதன்படி,  அனிஷாவை கடந்த  ஓராண்டாக தனது தாய் வீட்டிற்கு அனுப்பாமல் இருந்துள்ளனர். செல்போனில் மற்றவருடன்  தொடர்பு கொள்ள முடியாதபடி தடை விதித்துள்ளனர். அனிஷாவிற்கு பிரசாத்தின்  குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு  கொடுத்துள்ளதாகவும் அனிஷாவின்  குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அனிஷா மரணம்:

இந்நிலையில் தான், குவைத்தில் வேலை பார்த்து வந்த  பிரசாத் கடந்த  ஒரு வாரத்திற்கு முன்பாக, மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார். அதைதொடர்ந்து, மீண்டும் 30 சவரன் நகை மற்றும் பணம் கேட்டு அனிஷாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. திடீரென, அனிஷாவின்  தந்தை கில்பட்டிற்கு நேற்று மாலை பிரசாத் போன் மூலம் தொடர்புகொண்டு,  உங்களது மகள் தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார் என  தெரிவித்துள்ளார்.  இதையடுத்து, முழு விவரம் தெரியாமல் மருத்துவமனைக்கு கில்பர்ட்  மற்றும் அவரது  குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது தான், அனிஷா இறந்துவிட்ட தகவலை  பிரசாத் மற்றும்  அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணை:

இதனால் ஆத்திரமடைந்த கில்பர்ட்,  தனது மகளை  வரதட்சணை கொடுமை காரணமாக பிரசாத் மற்றும் அவரது தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் கொலை  செய்து விட்டதாக  தென்பாகம் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.  அதனடிப்படையில், தென்பாகம்  காவல்துறையினர்  பிரசாத் மற்றும்  அவரது குடும்பத்தினரை  பிடித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ஆர்டிஒ விசாரணை:

அனிஷா மற்றும் பிரசாத்திற்கு  திருமணம் ஆகி ஓராண்டு கூட முழுமையாக நிறைவடையாத நிலையில்,  அனிஷா மர்மமான முறையில் இறந்துள்ளதால், தூத்துக்குடி  ஆர்டிஒ இச்சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்தி வருகிறார். வரதட்சணை கொடுமை காரணமாக  பட்டதாரி இளம்பெண் தூத்துக்குடியில் மர்மமான முறையில்  இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளுக்கே 'ஷாக்' கொடுத்த மின்வாரியம்! - நகர்மன்றக் கூட்டத்தைப் பாதியிலேயே முடக்கிய மின் தடை
அதிகாரிகளுக்கே 'ஷாக்' கொடுத்த மின்வாரியம்! - நகர்மன்றக் கூட்டத்தைப் பாதியிலேயே முடக்கிய மின் தடை
Nagapattinam power cut (30-05-2026): வேளாங்கண்ணியில் நாளை மின் தடை! நாகை மக்களும் அலர்ட்.. எத்தனை மணி நேர மின் தடை?
Nagapattinam power cut (30-05-2026): வேளாங்கண்ணியில் நாளை மின் தடை! நாகை மக்களும் அலர்ட்.. எத்தனை மணி நேர மின் தடை?
Dindigul power cut (30-05-2026): திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! - நாளை 8 மணி நேரம் மின்தடை
Dindigul power cut (30-05-2026): திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! - நாளை 8 மணி நேரம் மின்தடை
கண்ணீர் துடைத்த ஒற்றை வீடியோ! 30 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா.. விருதுநகரில் நெகிழ்ச்சி
கண்ணீர் துடைத்த ஒற்றை வீடியோ! 30 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா.. விருதுநகரில் நெகிழ்ச்சி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget