மேலும் அறிய

திருவண்ணாமலை அருகே பல்லவ மன்னன், நந்தி வர்மன் காலத்தை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை அருகே இராந்தம் கிராமத்தில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவ மன்னன், நந்தி வர்மன் காலத்தை சேர்ந்த நடுகல்லை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் இராந்தம் கிராமத்தில் நடுகற்கள் இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச. பாலமுருகனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாவலர் வையவன், ராந்தம் கிராமத்தைச் சேர்ந்த மன்னார்சாமி ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த சி.பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா ஆகியோர்கள் கூட்டாக ஆய்வு செய்தனர். இராந்தம் கிராமத்தில் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு இடங்களில் 4 நடுகற்கள் கண்டறியப்பட்டது. அதில் ஒன்று ஊரின் நடுவே உள்ள விநாயகர் கோயில் அருகில் புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. அந்த நடுகல்லை ஊர் மக்கள் உதவியுடன் வெளியே எடுத்து சீரமைத்து கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. படியெடுக்கப்பட்ட கல்வெட்டை அவ்வூர் பள்ளி மாணவர்கள் தங்கள் பாடபுத்தகத்துடன் ஒப்பிட்டு ஆர்வமாக ஆய்வு செய்தனர்.

 



திருவண்ணாமலை அருகே பல்லவ மன்னன், நந்தி வர்மன் காலத்தை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு

இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச. பாலமுருகனிடம் பேசுகையில்,

இக்கல்வெட்டை படித்தளித்த கல்வெட்டியல் அறிஞர் சு. இராஜகோபல், இக்கல்வெட்டு பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தியது என்றும், இக்கல்வெட்டு வட்டடெழுத்து தமிழில் உள்ளது என்றும், இதில் நந்தி வர்மனின் 28-ஆவது ஆட்சியாண்டில் மண்டை குளநாட்டு மன்னர் உசவகள் மகன் சாத்தன் என்பவர் பூசலில் இறந்து பட்டான் என்று குறிப்பிடுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த கல்வெட்டில்  குறிப்பிடப்படும் நந்தி வர்மன் என்பது வட்டெழுத்து அமைதியைக் கொண்டும் ஆட்சியாண்டைக் கொண்டும் இரண்டாம் நந்தி வர்மன் (கி.பி. 759) காலத்தியதாக குறிக்கலாம் என்றும், இதில் குறிப்பிட்டுள்ள மண்டைகுளநாடு என்பது தற்போது போளுர் அருகே உள்ள மண்டகுளத்தூர் என்று அழைக்கப்படும் ஊரானது. இது 7,8 ஆம் நூற்றாண்டில் மண்டை குளநாட்டின் தலைநகராக இருந்துள்ளது.

 


திருவண்ணாமலை அருகே பல்லவ மன்னன், நந்தி வர்மன் காலத்தை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு

இந்த நாட்டுக்கு உட்பட்ட இராந்தம் பகுதியில் நடைபெற்ற கால்நடைகளைக் காக்கும் போரில் மண்டைகுளநாட்டு மன்னர் உசவகள் மகன் சாத்தன் என்பவர் இறந்துள்ளார். அதன் நினைவாக இக்கல் நடப்பட்டுள்ளது. பொதுவாக மற்ற நடுகற்களில் காணப்படும் இறந்துபோன வீரனின் உருவம் இந்த நடுகல்லில் இல்லை. எழுத்து மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள சொரகுளத்தூர் கிராமத்தில் உள்ள நடுகல்லும் மண்டைகுளநாட்டைச் சேர்ந்ததாகும். எனவே மண்டைகுளநாடு என்பது போளூர் திருவண்ணாமலைக்கு இடைப்பட்ட பகுதியாக அக்காலத்தில் இருந்துள்ளது. திருவண்ணாமலை பகுதியில் தற்போது கிடைத்துள்ள இந்த நடுகல் கல்வெட்டு மற்றும் அவ்வூரில் கிடைக்கும் கருப்பு சிவப்பு, பானை ஓடு ஆகியவற்றை கொண்டு இப்பகுதி தொன்மையான பகுதி என்றும் தெரியவருகிறது. தமிழக வரலாற்றுக்கு முக்கிய பங்களிக்கும் இது போன்ற நடுகற்களை அரசு ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Embed widget