மேலும் அறிய

திருவண்ணாமலை அருகே பல்லவ மன்னன், நந்தி வர்மன் காலத்தை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை அருகே இராந்தம் கிராமத்தில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவ மன்னன், நந்தி வர்மன் காலத்தை சேர்ந்த நடுகல்லை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் இராந்தம் கிராமத்தில் நடுகற்கள் இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச. பாலமுருகனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாவலர் வையவன், ராந்தம் கிராமத்தைச் சேர்ந்த மன்னார்சாமி ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த சி.பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா ஆகியோர்கள் கூட்டாக ஆய்வு செய்தனர். இராந்தம் கிராமத்தில் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு இடங்களில் 4 நடுகற்கள் கண்டறியப்பட்டது. அதில் ஒன்று ஊரின் நடுவே உள்ள விநாயகர் கோயில் அருகில் புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. அந்த நடுகல்லை ஊர் மக்கள் உதவியுடன் வெளியே எடுத்து சீரமைத்து கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. படியெடுக்கப்பட்ட கல்வெட்டை அவ்வூர் பள்ளி மாணவர்கள் தங்கள் பாடபுத்தகத்துடன் ஒப்பிட்டு ஆர்வமாக ஆய்வு செய்தனர்.

 



திருவண்ணாமலை அருகே பல்லவ மன்னன், நந்தி வர்மன் காலத்தை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு

இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச. பாலமுருகனிடம் பேசுகையில்,

இக்கல்வெட்டை படித்தளித்த கல்வெட்டியல் அறிஞர் சு. இராஜகோபல், இக்கல்வெட்டு பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தியது என்றும், இக்கல்வெட்டு வட்டடெழுத்து தமிழில் உள்ளது என்றும், இதில் நந்தி வர்மனின் 28-ஆவது ஆட்சியாண்டில் மண்டை குளநாட்டு மன்னர் உசவகள் மகன் சாத்தன் என்பவர் பூசலில் இறந்து பட்டான் என்று குறிப்பிடுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த கல்வெட்டில்  குறிப்பிடப்படும் நந்தி வர்மன் என்பது வட்டெழுத்து அமைதியைக் கொண்டும் ஆட்சியாண்டைக் கொண்டும் இரண்டாம் நந்தி வர்மன் (கி.பி. 759) காலத்தியதாக குறிக்கலாம் என்றும், இதில் குறிப்பிட்டுள்ள மண்டைகுளநாடு என்பது தற்போது போளுர் அருகே உள்ள மண்டகுளத்தூர் என்று அழைக்கப்படும் ஊரானது. இது 7,8 ஆம் நூற்றாண்டில் மண்டை குளநாட்டின் தலைநகராக இருந்துள்ளது.

 


திருவண்ணாமலை அருகே பல்லவ மன்னன், நந்தி வர்மன் காலத்தை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு

இந்த நாட்டுக்கு உட்பட்ட இராந்தம் பகுதியில் நடைபெற்ற கால்நடைகளைக் காக்கும் போரில் மண்டைகுளநாட்டு மன்னர் உசவகள் மகன் சாத்தன் என்பவர் இறந்துள்ளார். அதன் நினைவாக இக்கல் நடப்பட்டுள்ளது. பொதுவாக மற்ற நடுகற்களில் காணப்படும் இறந்துபோன வீரனின் உருவம் இந்த நடுகல்லில் இல்லை. எழுத்து மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள சொரகுளத்தூர் கிராமத்தில் உள்ள நடுகல்லும் மண்டைகுளநாட்டைச் சேர்ந்ததாகும். எனவே மண்டைகுளநாடு என்பது போளூர் திருவண்ணாமலைக்கு இடைப்பட்ட பகுதியாக அக்காலத்தில் இருந்துள்ளது. திருவண்ணாமலை பகுதியில் தற்போது கிடைத்துள்ள இந்த நடுகல் கல்வெட்டு மற்றும் அவ்வூரில் கிடைக்கும் கருப்பு சிவப்பு, பானை ஓடு ஆகியவற்றை கொண்டு இப்பகுதி தொன்மையான பகுதி என்றும் தெரியவருகிறது. தமிழக வரலாற்றுக்கு முக்கிய பங்களிக்கும் இது போன்ற நடுகற்களை அரசு ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget