மேலும் அறிய

ரூ.730 கோடியை செலுத்த வேண்டும் - ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு ஒரு மாதம் கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

அரசுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூபாய் 730 கோடியை ஒரு மாதத்தில் செலுத்தும்படி, ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்தும்படி, ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946ம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 1970ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாம்பலம் - கிண்டி தாசில்தாரர் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசுக்கு பதிலளித்த ரேஸ்கிளப், 1946ம் ஆண்டு ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது குறித்த பிரிவு ஏதும் இல்லை எனத் தெரிவித்தது. இந்த விளக்கத்தை நிராகரித்த அரசு, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கி செலுத்தும்படி ரேஸ் கிளப்புக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். தவறினால் மனுதாரரை காவல் துறையினர் உதவியுடன் வெளியேற்றி, நிலத்தை அரசு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திரத்துக்கு முன் மேற்கொண்ட குத்தகையை அரசு மறு ஆய்வு செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, 2004ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட வாடகை பாக்கி 12 ஆயிரத்து 381 கோடியே 35 லட்சத்து 24 ஆயிரத்து 269 ரூபாயை 2 மாதங்களில் செலுத்தக் கூறி ஒரு மாதத்தில் நோட்டீஸ் அனுப்பவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒரு சில பணக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில் தற்போது நடைபெறும் செயல்களில் எந்த பொது நலனும் இல்லை எனவும், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலத்தை மீட்டு மக்கள் நலனுக்கு பயன்படுத்தலாம் எனவும் அரசுக்கு நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார். அரசு நிலங்களின் குத்தகையை உயர்த்துவது என்பது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்த நீதிபதி, அதை முறையற்றது என்றோ, சட்டவிரோதமானது என்றோ கூற முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

பொதுநலனை உறுதி செய்யும் வகையிலும், அரசு வருவாயை காக்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்யவும் அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
UGC NET Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலான போலி தகவல்- ஒருவழியாக அறிவித்த என்டிஏ
UGC NET Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலான போலி தகவல்- ஒருவழியாக அறிவித்த என்டிஏ
IND vs NZ: 31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியாவை காப்பாற்றுவது யார்?
IND vs NZ: 31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியாவை காப்பாற்றுவது யார்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
UGC NET Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலான போலி தகவல்- ஒருவழியாக அறிவித்த என்டிஏ
UGC NET Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலான போலி தகவல்- ஒருவழியாக அறிவித்த என்டிஏ
IND vs NZ: 31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியாவை காப்பாற்றுவது யார்?
IND vs NZ: 31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியாவை காப்பாற்றுவது யார்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
Breaking News LIVE 17th oct 2024: ரெட் அலர்ட் கொடுத்தபின் மழையே இல்லை - இபிஎஸ்
Breaking News LIVE 17th oct 2024: ரெட் அலர்ட் கொடுத்தபின் மழையே இல்லை - இபிஎஸ்
Watch Video: நக்கலாக சிரித்த ஜோ ரூட்! தக்க பாடம் புகட்டிய பாகிஸ்தான் பவுலர் - நடந்தது என்ன?
Watch Video: நக்கலாக சிரித்த ஜோ ரூட்! தக்க பாடம் புகட்டிய பாகிஸ்தான் பவுலர் - நடந்தது என்ன?
52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள்: சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம்! சுங்கத்துறை அதிரடி!
52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள்: சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம்! சுங்கத்துறை அதிரடி!
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
Embed widget