மேலும் அறிய

’சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’- கவனிக்கப்பட்ட நீதிபதியின் கருத்து

"தமிழ் மண்ணில் இப்படி ஒரு சம்பவம் இனி நடக்கூடாது , மேலும் மதுரையை கண்ணகி எரித்தை போல், சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்"

கடலூர் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியில் வசிக்கும் தலித் சமுகத்தை சேர்ந்த சாமிகண்ணு என்பவரின் மகன் முருகேசன் பொறியாளர் பட்டம் பெற்றவராவார். இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி (22) என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர். எனினும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.
 

’சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’- கவனிக்கப்பட்ட நீதிபதியின் கருத்து
 
இந்த நிலையில் , முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர் , ஸ்ரீமுஷ்ணம் வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவகாரம் தெரிய வந்தது. எனவே , முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக 2003 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முருகேசனையும் , மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர் . பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களை கொலை செய்து , சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர் .
 
இந்த சம்பவத்தில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ப.தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது 2017 செப்டம்பர் 11ஆம் தேதி வரை தினமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் இந்த விசாரணை நடைபெற்றது. இதற்கான தீர்ப்பு இன்று கடலூர் எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தமராசா கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கும் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டார்.

’சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’- கவனிக்கப்பட்ட நீதிபதியின் கருத்து
 
 
இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் கவனம் பெற்றதாக அமைந்துள்ளது, 
 
கொலை செய்யப்பட்ட முருகேசனை கிணற்றில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்து துன்புறுத்தியதை மேற்கோள் காட்டி குற்றம் சாட்டப்பட்டவர்களின் காட்டுமிராண்டித்தனமும் அச்சமற்றத்தனமும் சாதாரண மக்களுக்கு அச்சம் ஊட்டும் வகையில் படுபயங்கரமாக இருந்தது இந்த சம்பவம் எனவும், குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் தங்களது பணியை ஒழுங்காக செய்யாமல், காவலர்கள் பொய்யான ஆவங்களையும் பொய்யான நபர்களையும் சேர்த்து இந்த வழக்கினை திசை திருப்பியதால் அவர்களுக்கு ஹரியானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை மேற்கோள் காட்டி ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது, மேலும் இவர்களின் சார்பாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வழங்க வேண்டும்.
 
மேலும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அய்யாசாமி, குணசேகரன் என்பவர்களை இரண்டு நாட்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர் ஆதலால் அவர்களுக்கு என எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தீர்ப்பு கூறி முடித்தபின், "தமிழ் மண்ணில் இப்படி ஒரு சம்பவம் இனி நடக்கூடாது , மேலும் மதுரையை கண்ணகி எரித்தை போல், சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்" என கூறி முடித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.