மேலும் அறிய

’சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’- கவனிக்கப்பட்ட நீதிபதியின் கருத்து

"தமிழ் மண்ணில் இப்படி ஒரு சம்பவம் இனி நடக்கூடாது , மேலும் மதுரையை கண்ணகி எரித்தை போல், சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்"

கடலூர் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியில் வசிக்கும் தலித் சமுகத்தை சேர்ந்த சாமிகண்ணு என்பவரின் மகன் முருகேசன் பொறியாளர் பட்டம் பெற்றவராவார். இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி (22) என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர். எனினும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.
 

’சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’- கவனிக்கப்பட்ட நீதிபதியின் கருத்து
 
இந்த நிலையில் , முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர் , ஸ்ரீமுஷ்ணம் வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவகாரம் தெரிய வந்தது. எனவே , முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக 2003 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முருகேசனையும் , மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர் . பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களை கொலை செய்து , சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர் .
 
இந்த சம்பவத்தில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ப.தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது 2017 செப்டம்பர் 11ஆம் தேதி வரை தினமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் இந்த விசாரணை நடைபெற்றது. இதற்கான தீர்ப்பு இன்று கடலூர் எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தமராசா கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கும் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டார்.

’சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’- கவனிக்கப்பட்ட நீதிபதியின் கருத்து
 
 
இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் கவனம் பெற்றதாக அமைந்துள்ளது, 
 
கொலை செய்யப்பட்ட முருகேசனை கிணற்றில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்து துன்புறுத்தியதை மேற்கோள் காட்டி குற்றம் சாட்டப்பட்டவர்களின் காட்டுமிராண்டித்தனமும் அச்சமற்றத்தனமும் சாதாரண மக்களுக்கு அச்சம் ஊட்டும் வகையில் படுபயங்கரமாக இருந்தது இந்த சம்பவம் எனவும், குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் தங்களது பணியை ஒழுங்காக செய்யாமல், காவலர்கள் பொய்யான ஆவங்களையும் பொய்யான நபர்களையும் சேர்த்து இந்த வழக்கினை திசை திருப்பியதால் அவர்களுக்கு ஹரியானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை மேற்கோள் காட்டி ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது, மேலும் இவர்களின் சார்பாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வழங்க வேண்டும்.
 
மேலும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அய்யாசாமி, குணசேகரன் என்பவர்களை இரண்டு நாட்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர் ஆதலால் அவர்களுக்கு என எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தீர்ப்பு கூறி முடித்தபின், "தமிழ் மண்ணில் இப்படி ஒரு சம்பவம் இனி நடக்கூடாது , மேலும் மதுரையை கண்ணகி எரித்தை போல், சாதி ஆணவக்கொலை ஆனது இந்த கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்" என கூறி முடித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget