மேலும் அறிய

Minister Udhayanithi Stalin: “வாட்ஸ் அப்பில் உலா வரும் செய்திகள்; பகுத்தறிவோடு சிந்தியுங்கள்” - உதயநிதி வேண்டுகோள்

திமுக அரசின் பெண்கள் முன்னேற்றத் திட்டங்களின் தூதுவர்களாக மகளிர் செயலாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 500 மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் டெபிட் அட்டைகளை வழங்கினார்.

Minister Udhayanithi Stalin: “வாட்ஸ் அப்பில் உலா வரும் செய்திகள்; பகுத்தறிவோடு சிந்தியுங்கள்” - உதயநிதி வேண்டுகோள்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக மாநில அளவில் அதிக பயனாளிகளைக் கொண்ட மாவட்டமாக சேலம் திகழ்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முற்போக்கான திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தை பின்பற்றி கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் பெண்களுக்கான திட்டத்தை அறிவித்துள்ளன. பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச்சீட்டாக மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அமைந்துள்ளது. பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவை தமிழக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அதற்காக மகளிர் முன்னேற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு கொண்டு வந்துள்ளது. மகளிர் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்து 3 முக்கிய விஷயங்களை முறியடித்து திமுக அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கலாசார ரீதியாக ஆண்-பெண் அடிமைத்தனத்தை உடைத்து மகளிர் கல்வி கற்பதற்கும் வேலைவாய்ப்பை பெறுவதற்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தந்தையின் சொத்தில் பெண்களுக்கான உரிமையை 30 ஆண்டுகளுக்கு முன்னரே கலைஞர் சட்டம் இயற்றி வாங்கி கொடுத்தார். மூன்றாவது தடையான பொருளாதார தடையை முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் நீக்கியுள்ளார். சிறுமியாக இருக்கும்போது பெற்றோரை, திருமணத்திற்கு பிறகு கணவரை, வயதான பிறகு மகனை எதிர்பார்க்கும் நிலை இனி பெண்களுக்கு இல்லை. பொருளாதார ரீதியில் பெண்களுக்கு முன்னேற்றம் கிடைக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கியதைப் போலவே புதுமைப் பெண் திட்டம், இலவச பேருந்து பயணத் திட்டம், காலை நேரங்களில் மகளிர் சிரமப்படுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் 17 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மகளிர் நலத்திட்டங்களுக்கும் மகுடம் சூட்டியது போல மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமைந்துள்ளது. பெண்கள் அனைவரும் பொதுவாழ்க்கையில் ஈடுபட வேண்டும். அரசியலுக்கு வர வேண்டும். இன்றைக்கு உள்ளாட்சிப் பொறுப்புகளில் 50 சதவீத இடங்களில் மகளிர் பதவியில் அமர திமுக அரசே காரணம். இன்றைக்கு வாட்ஸ்-அப் –ல் நிறைய தகவல் வருகிறது. அதில் உண்மை எது பொய் எது என பிரித்து பார்த்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையை விட பொய் செய்திகள் வேகமாக பரவுகின்றன. மகளிர் அனைவரும் அனைத்து விஷயங்களையும் முற்போக்காக பகுத்தறிவுடன் சிந்தித்து பார்த்து செயலாற்ற வேண்டும். அப்போது அவர்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் பகுத்தறிவுடன் பிறந்து தமிழ்ச்சமுதாயம் முன்னேறிய சமுதாயமாக மாற முடியும். பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவது நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வரின் தூதுவர்களாக மகளிர் செயலாற்ற வேண்டும்” எனக் கூறினார். 

Minister Udhayanithi Stalin: “வாட்ஸ் அப்பில் உலா வரும் செய்திகள்; பகுத்தறிவோடு சிந்தியுங்கள்” - உதயநிதி வேண்டுகோள்

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ”மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து பணம் கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். முதலமைச்சருக்கு நிறைய பணிகள் உள்ள நிலையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மகன் தந்தைக்காற்றும் உதவி போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அரசு மற்றும் கட்சி நிர்வாகத்தை திறம்பட வழிநடத்தி வருகிறார். முதலமைச்சராக கலைஞர் இருந்தபோது ஸ்டாலின செயல்பட்டது போல, தற்போது முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கும்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறம்பட செயலாற்றி வருகிறார். அவருக்கு எப்போதும் உற்ற துணையாக இருப்போம்” என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Embed widget