மேலும் அறிய

Karukka Vinod: விசாரணை வளையத்திற்குள் வரும் கருக்கா வினோத்.. 3 நாள் காவலில் எடுக்க அனுமதி..

பிரபல ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

கடந்த வாரம் அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் விரைந்து அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். சம்பவம் தொடர்பாக கிண்டி சைதாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த செயலில் ஈடுபட்டது பிரபல ரவுடி கருக்கா வினோத் என தெரிய வந்தது. இதனிடையே ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. இவ்வழக்கில் அவசர கதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

ஆளுநர் மாளிகை அளித்த புகாரை தொடர்ந்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை டிஜிபி அலுவலகம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், “இந்தியாவின் மிகவும் அமைதியான மாநிலம் தமிழ்நாடு என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முதல் உயர் பதவிகளில் இருப்பவர்கள் வரை அரசு வகுத்துள்ள சட்டப்படி பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார். 

மேலும், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை, சர்தார் வல்லபாய் படேல் சாலையில் தான் வீசப்பட்டது. அவர் 4 பெட்ரோல் குண்டுகளில் இரண்டு வெடித்தன. ரவுடி கருக்கா வினோத்தை 5 காவலர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் பிடிக்க வரும்போது அவர்கள் மீது வினோத் பெட்ரோல் குண்டு வீச முயன்றான். 

ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, விஷமிகள் உள்ளே நுழைய முயன்றதாக கூறியது உண்மையில்லை. சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு அரசியல் பின்னணி உள்ளதால் என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. ஆளுநர் மாளிகையில் இருந்து புகார் வருவதற்கு முன்பே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விட்டது.   253 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஆளுநர் எங்கு சென்றாலும் பாதுகாப்பு வழங்குகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து இன்று ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். கிண்டி போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று மனு மீதான விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட்டார்.

ஆளுநர் மாளிகை வாயிலில் முன்பு பெட்ரோல் குண்டு வீச அதற்கான காரணம் ஏன்? பின்னணியில் யார் உள்ளார்கள்? என்பது குறித்து விசாரணை செய்ய போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

நான் தான் ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு போட்டேன், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளாக மேல் இருப்பவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கருக்கா வினோத் கோஷமிட்டபடியே சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குள் சென்றார். பின் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget