மேலும் அறிய

Teachers Strike: "போராட்டம் தொடரும்" டி.பி.ஐ. வளாகத்தில் குவிந்த இடைநிலை ஆசிரியர்கள் - போலீஸ் குவிப்பு

சென்னையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களுடைய போராட்டத்தை தொடர உள்ளதாக அறிவித்தனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக போராடி வந்த அவர்களை இன்று காலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

போராட்டம் தொடரும்:

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராடி வந்த ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சற்று முன் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

போலீசார் விடுவித்த பிறகு பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் டெட் ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். ஆனால், இடைநிலை பதிவு மூப்பு சங்க ஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

டி.பி.ஐ.வளாகத்தில் பரபரப்பு:

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் வரும் 10.30 மணியளவில் தங்களது போராட்டத்தை தொடர்வோம் என்று அறிவித்துள்ளனர். மேலும், தங்களது போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிவித்துள்ளனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் இந்த அறிவிப்பால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தை தொடர்வோம் என்று அறிவித்துள்ளதால், டி.பி.ஐ. வளாகத்திற்கு மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் குவிந்து வருகின்றனர். உள்ளே டி.பி.ஐ. அலுவலர்கள் தவிர வேறு யாரையும் காவல்துறையினர் அனுமதிக்காத சூழலில், ஆசிரியர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அவர்களது போராட்டத்தை டி.பி.ஐ. வளாகத்திற்கு வெளியில் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமைச்சர் அறிவிப்பு:

முன்னதாக, ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் உயர்த்தப்பட்டு 12 ஆயிரத்து 500 ரூபாயாக தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.  

ஆனாலும், அமைச்சரின் அறிவிப்பில் முழுமையாக திருப்தி அடையவில்லை என்று இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் டெட் தேர்வு ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை போலீசார் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தனர். அவர்களை பின்பு, மாலை 7 மணியளவில் விடுவித்து பேருந்துகளில் வேறு, வேறு இடங்களில் இறக்கி விட்டனர்.

பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் டெட் தேர்வு ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

’’மகள் ஓடிப்போக நீதா காரணம்’’ ஆத்திரத்தில் மூக்கை கடித்து துப்பிய மாப்பிள்ளையின் நண்பர்
’’மகள் ஓடிப்போக நீதா காரணம்’’ ஆத்திரத்தில் மூக்கை கடித்து துப்பிய மாப்பிள்ளையின் நண்பர்
Thiruparankundaram: திருப்பரங்குன்றம் விவகாரம்; நிர்மல்குமாரின் பேட்டி மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது - தமிழிசை விமர்சனம்
Thiruparankundaram: திருப்பரங்குன்றம் விவகாரம்; நிர்மல்குமாரின் பேட்டி மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது - தமிழிசை விமர்சனம்
திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Embed widget