முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - முதல்வர் உத்தரவு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 448 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 20,046 ஆக அதிகருத்துள்ளது.

Background
Tamil nadu Corona Latest News Live Updates: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொரோனா பரவல் தொடர்பாக மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஊரடங்கை இரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்தது. இதற்கடுத்து, தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, பொதுமக்களின் வசதி கருதி, மாநிலம் முழுவதும் நேற்று இரவு 9 மணிவரை அனுமதிக்கப்பட்டது. இன்று காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரையிலும் அனைத்துக் கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளது.
To prevent the spread of Covid-19 infection, the existing lockdown has been extended for a week with effect from 24.05.2021.@GSBediIAS#Covid19Chennai #GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/uAvlQ5kwkn
— Greater Chennai Corporation (@chennaicorp) May 22, 2021
தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்- முழு விவரம்
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகுந்த தாக்கத்தை மாநிலம் முழுவதம் ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு, தற்போது எந்த தளர்வுகளுமின்றி நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்காக கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக 35 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு இன்றும் 35 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒருநாளில் 35 ஆயிரத்து 483 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 18 லட்சத்து 42 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று கொரோனாவால் 5 ஆயிரத்து 169 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர்த்து பிற 36 மாவட்டங்களில் 30 ஆயிரத்து 314 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று தனிமைப்படுத்தப்படுவர்கள் உள்பட மொத்தாக சிகிச்சையில் இருப்பவர்கள் 49 ஆயிரத்து 55 ஆகும். தமிழ்நாடு முழுவதும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 10 லட்சத்து 93 ஆயிரத்து 786 நபர்கள் ஆவார்கள், பெண்கள் மட்டும் 7 லட்சத்து 48 ஆயிரத்து 520 ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 நபர்கள் ஆவார்கள். இன்று மட்டும் கொரோனாவால் ஆண்கள் 19 ஆயிரத்து 725 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 15 ஆயிரத்து 758 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 25 ஆயிரத்து 196 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் 15 லட்சத்து 27 ஆயிரத்து 733 நபர்களாக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 422 ஆக பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 467 ஆகவும், நேற்று 448 ஆகவும் பதிவாகிய நிலையில் இன்று சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக 422 ஆக உயிரிழப்பு குறைந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 182 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். 240 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இன்றைய உயிரிழப்பு மூலம், தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா வைரசால் 6 ஆயிரத்து 379 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
25-ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல அனுமதியில்லை - தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதியதாக பதவியேறறுக் கொண்ட தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஊரடங்கு என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததாலும், தினசரி உயிரழப்பு 400 என்ற அளவில் பதிவாகி வருகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் எந்த தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தொழிற்சாலைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “ கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது மிக இன்றியமையாத சில பணிகளுக்கு முட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் ஆகியவை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்கு கிடங்குகள், தொலைத்தொடர்பு சேவைகள், அத்தியாவசிய தரவு மையங்கள் பராமரிப்பு பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலை பணியாளர்கள் பணிக்கு சென்றுவர ஏற்கனவே இ-பதிவு முறையில் https://eregister.tnega.org/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இ பதிவு செய்துள்ள வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றிற்கு மட்டும் அனுமதி புதுப்பித்து அளிக்கப்படும். இரு சக்கர வாகனங்களில் பணியாளர்கள் பணிக்கு சென்று வர 25-ந் தேதி முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆதலால், இந்த தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களை பணிக்கு அழைத்துவர நான்கு சக்கர வாகனங்களை ஏற்பாடு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த நான்கு சக்கர வாகனங்களை இ-பதிவு முறையில் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இ பதிவு செய்து அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்களின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த வாகனங்களை அனுமதிப்பார்கள். இரு சக்கர வாகனங்களின் அனுமதிகளைத் தவிர மற்ற விலக்களிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான இ பதிவு தானாகவே புதுப்பிக்கப்படும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறிகள், மருந்து, ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சரக்கு போக்குவரத்திற்கு மட்டும் இந்த நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதற்காகவும், தளர்வில்லாத ஊரடங்கை முழு அளவில் செயல்படுத்தவும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















